‘வீட்டு வாடகையை 2 மாதம் கழித்து பெற்றுக்கொள்ளுங்கள்’ – உரிமையாளர்களுக்கு முதல்வர் வேண்டுகோள்

உள்ளாட்சி அமைப்புகளுக்கு மக்கள் செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம் போன்றவை செலுத்துவதற்கான கால அவகாசம் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ‘வீட்டு வாடகையை 2 மாதம் கழித்து பெற்றுக்கொள்ளுங்கள்’ – உரிமையாளர்களுக்கு முதல்வர் வேண்டுகோள் தமிழக முதல்வர் இன்று புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். தற்போது உள்ள சூழ்நிலையில், வாடகை வீடுகளில் குடியிருப்போர் வாடகை செலுத்துவதில் உள்ள சிரமங்களை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். எனவே, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான வீட்டு வாடகைத் தொகையை …

”அடுத்த 3 மாதங்களுக்கு, கடன்களுக்கான இ.எம்.ஐ. வசூலிக்கப்படாது” – நிதித்துறை செயலர் தகவல்!!

கொரோனா பாதிப்பால் மக்கள் பொருளாதார சிக்கலில் தவித்து வரும் நிலையில் அடுத்த 3 மாதங்களுக்கு கடன்களுக்கான மாதாந்திர இ.எம்.ஐ.யை வங்கிகள் வசூலிக்காது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக நிதித்துறை செயலர் கிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டுள்ள ஊரடங்கு நடவடிக்கையால் தொழில் நிறுவனங்களும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பொருளாதார சிக்கல் அனைத்து தரப்பினரையும் எதிர்கொண்டுள்ளது. இந்த நிலையில் தமிழக நிதித்துறை செயலர் கிருஷ்ணன் செய்தியாளர்களை இன்று சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது …

வங்கிகள் சுமுகமாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

தேசிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் வங்கிகள், ஏடிஎம்கள் சுமுகமாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. ஏழை, எளிய மக்கள், விவசாயிகளுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள நிதி உதவித் திட்டங்கள் அமலுக்கு வர இருக்கும் நிலையில், மத்திய அரசு இவ்வாறு கூறியுள்ளது. இது தொடா்பாக மத்திய உள்துறை செயலா் அஜய் பல்லா அனைத்து மாநில, யூனியன் பிரதேச தலைமைச் செயலா்களை தொடா்பு கொண்டு பேசினாா். அப்போது, …

கொரோனா வைரஸ் பாதிப்பு: டெல்லி கூட்டத்தில் கலந்து கொண்ட 9 பேர் பலி

டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 9 பேர் மரணம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. புதுடெல்லி, கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், டெல்லி நிஜாமுதீன் பகுதியில் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மற்றும் மலேசியா, இங்கிலாந்து, சவுதி அரேபியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் சுமார் 1,700 பேர் கலந்து கொண்டனர். இதில் பங்குகொண்டவர்களில் கணிசமான பேர் பின்னர் தங்கள் …

கொரோனா தடுப்பு: ஆன்மிக அமைப்புகளுடன் பிரதமர் ஆலோசனை

புதுடில்லி: கொரோனா தடுப்பு பணி குறித்தும், அரசுடன் இணைந்து செயல்படுவது குறித்து ஆன்மிக அமைப்புகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். கொரோனா வைரசை கட்டுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடி தினமும் பல்வேறு துறை மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்களை தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தி வருகிறார். அதன் அடிப்படையில் நாட்டின் முக்கியமான ஆன்மிக அமைப்புகளை தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, கொரோனா நோய்தொற்று குறித்து ஆலோசனை நடத்தினார். மேலும், இந்த முக்கியமான நேரத்தில், ஆன்மிக அமைப்புகளும், அரசும் …

சமூக தொற்றாகவில்லை: அச்சம் வேண்டாம் : அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை:”தமிழகத்தில் ‘கொரோனா’ வைரஸ் சமூக தொற்றாக பரவவில்லை. எனவே மக்கள் பயப்பட வேண்டாம்; மன வலிமையுடன் இருந்தால் கொரோனா பரவலை ஒழித்து விடலாம்” என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்தில் சமுதாய தொற்றாக பரவாமல் இருக்க மாநில அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த சிறப்பு பேட்டி:சீனாவின் வூஹான் நகரில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது முதல் தமிழகத்தில் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.ஊரடங்கால் உதவிஒருவர் …

முதியோருக்கான உதவி தொகை வீடுகளுக்கே வந்து வழங்கப்படும்; முதல் அமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

முதியோருக்கான உதவி தொகை வீடுகளுக்கே வந்து வழங்கப்படும் என முதல் அமைச்சர் பழனிசாமி அறிவித்து உள்ளார். சென்னை, கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் வருகிற ஏப்ரல் 14ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் நாடு முழுவதும் பால் சப்ளை, மருத்துவம் போன்ற அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்து பணிகளும் முடங்கி உள்ளன. கடைகளை குறிப்பிட்ட நேரம் மட்டுமே திறந்து வைக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. பஸ், ரெயில், விமான சேவைகள் நிறுத்தப்பட்டு உள்ளன. …

பனைத்தொழிலாளிகளுக்கு பேரிடர் உதவித்தொகை   வழங்க வேண்டும்! S.A .சுபாஷ் பண்ணையார் அரசுக்கு வேண்டுகோள் .

கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில்  பனை தொழில் செய்யும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கியுள்ளது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. வர்த்தக நிறுவனங்கள், அலுவலகங்கள், ஷாப்பிங் மால்கள், பெரிய கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  அத்தியாவசிய தேவைகளான மளிகை, காய்கறி கடைகள், பெட்ரோல் நிலையங்களுக்கு நேர கட்டுப்பாட்டுடன் இயங்க அனுமதிக்கப்பட்டடுள்ளது விவசாய விளைபொருட்கள் விவசாயம் சார்ந்த  பணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி படடுள்ளது அதுபோல் விவசாயத்தை சார்ந்த  பனை தொழிலுக்கு இருக்கும் …

தமிழகத்தில் கொரோனா – பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 67 ஆக உயர்வு

தமிழகத்தில் ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சென்னை, தமிழ்நாட்டில் கொரோனா பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு பின்னர் எடப்பாடி பழனி சாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கொரோனா …

சித்த மருத்துவத்தின் மூலம் கொரோனா வைரசை அழிக்க முடியுமா? – பரிசீலிக்க நிபுணர் குழுவுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

சித்தா, ஆயுர்வேத, யுனானி மருத்துவத்தின் மூலம் கொரோனா வைரசை அழிக்க முடியும் என்ற கோரிக்கையை விரைவாக பரிசீலித்து தகுந்த முடிவை எடுக்கும்படி மாநில அரசு அமைத்துள்ள நிபுணர் குழுவுக்கு, சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னை, உலகம் முழுவதையும் ‘கொரோனா வைரஸ்’ அச்சுறுத்தி வருகிறது. பல நாடுகளில் இந்த வைரசினால் ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். இந்தநிலையில், இந்த வைரசை அழிக்கவும், கொரோனா வைரஸ் தாக்கியவர்களின் உயிரை காப்பாற்றவும் சித்த, ஆயுர்வேத, யுனானி மருத்துவத்தில் மருந்து உள்ளதாக கூறி சென்னை ஐகோர்ட்டில் …