தொடர் சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் ஆஸ்பத்திரிகளின் பதிவு ரத்து செய்யப்படும் – தமிழக அரசு எச்சரிக்கை

தாய்-சேய் நலன் மற்றும் நீண்டகால நோய்க்கு தொடர் சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் ஆஸ்பத்திரிகளின் பதிவு ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. சென்னை, இதுகுறித்து தமிழக மருத்துவ மற்றும் ஊரக மருத்துவ சேவை இயக்குனர், மாவட்ட கலெக்டர்கள், மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ உயர் அதிகாரிகளுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:- மாநிலத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள இந்த சூழ்நிலையில் அனைத்து தனியார் ஆஸ்பத்திரிகளும், குழந்தை பிறப்பு, தாய்-சேய் நலன் …

உலகம் முழுவதும் கொரோனா பலி 53 ஆயிரத்தை தாண்டியது; பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்தது

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்தது. பலியானோர் எண்ணிக்கை 53 ஆயிரத்தை தாண்டியது. வாஷிங்டன், சீனாவில் உருவாகி மற்ற நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைக்கிறது. கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்காததால், அது மக்களுக்கு பரவுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒவ்வொரு நாடும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இந்தியாவிலும் 21 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. என்னதான் நடவடிக்கை …

திவாலாகும் நிலையில் விமான நிறுவனங்கள்: அரசின் ஆதரவு கேட்டு நிர்மலா சீதாராமனுக்கு கடிதம்

திவாலின் விளிம்பு நிலையில் விமான நிறுவனங்கள் இருப்பதாக கூறி, அரசின் உதவியை நாடி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு இந்திய வர்த்தக, தொழில் சம்மேளனம் கடிதம் எழுதி உள்ளது. புதுடெல்லி, கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக, சமூக இடைவெளியை பின்பற்றும் நோக்கத்துடன் நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதே போன்று பல்வேறு வெளிநாடுகளும் தடை விதித்து உள்ளன. இதன் காரணமாக எல்லா விதமான பயணிகள் போக்குவரத்து சாதனங்களும் முடக்கப்பட்டுள்ளன. அனைத்து விமானங்களும் உள்நாட்டு …

ஊரடங்கு கால சிறப்பு நிவாரணம்; 4 கோடி ஏழைப்பெண்களின் வங்கி கணக்குகளில் தலா ரூ.500 – மத்திய அரசு செலுத்தியது

ஊரடங்கு கால சிறப்பு நிவாரணமாக 4 கோடி ஏழைப்பெண்களின் வங்கி கணக்குகளில் மத்திய அரசு ரூ.500 செலுத்தியது. புதுடெல்லி, நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 21 நாள் ஊரடங்கை மத்திய அரசு 25-ந் தேதி முதல் அமல்படுத்தியது. இதன் காரணமாக சாதாரண கூலி தொழிலாளர்கள் தொடங்கி அனைத்து தொழில் துறையினரும், வியாபாரிகளும், தனியார் துறையினரும் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். பலதரப்பினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், கடந்த 26-ந் …

பிரதமர் விவகாரத்தில் நான் ஏன் மூக்கை நுழைக்க வேண்டும்: மம்தா

கோல்கட்டா: பிரதமர் விவகாரத்தில் நான் ஏன் மூக்கை நுழைக்க வேண்டும் என நேற்று பிரதமர் மோடி கொரோனா தொடர்பாக வெளியிட்ட வீடியோ குறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். நேற்று பிரதமர் மோடி வீடியோ மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அதில் ‘கொரோனா வைரசை தோற்கடிக்க நாளை (ஏப்.5ம் தேதி) இரவு, 9:00 மணிக்கு, 9 நிமிடங்கள், மக்கள் அனைவரும் மின் விளக்குகளை அணைத்து, தீபம், டார்ச் லைட், மெழுகுவர்த்தி, மொபைல் போன் விளக்கு களை …

ஊரடங்கை மீறி கர்நாடகாவுக்குள் நுழைந்த வாலிபர்கள்; தடுத்த போலீஸ்காரர் கல்வீச்சில் காயம்

கேரளாவில் இருந்து கர்நாடக எல்லைக்குள் ஊரடங்கை மீறி நுழைந்த வாலிபர்களை தடுத்த காவல் அதிகாரி கல்வீச்சில் காயம் அடைந்து உள்ளார். பெங்களூரு, நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. கடந்த மார்ச் 24ந்தேதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அன்று நள்ளிரவு முதல் வரும் 14ந்தேதி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும். இதனால் பொதுமக்கள் வீடுகளை …

நெல்லையில் கரோனா பாதிப்பு 36ஆக உயர்வு

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 36ஆக உயர்ந்துள்ளது. வெள்ளிக்கிழமை கரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட 6 பேரும் தில்லி மாநாட்டுக்கு சென்று வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கரோனா நோய் தொற்று பரவலைத் தடுக்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தனிமைச் சிகிச்சை பிரிவு இயங்கி வருகிறது. இதில் தனிமை சிகிச்சை பிரிவு, கண்காணிப்பு பிரிவு, ஆய்வு …

சென்னையில் கொரோனா நோயாளிகளுக்கு உதவ ரோபோக்கள்

சென்னை : சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கவும் மருந்துகளை வழங்கவும் ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன. கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து இன்று(ஏப்.,3) சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி வார்டுகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. …

தமிழகத்தில் சமூக பரவல் இல்லை: சுகாதார செயலர்

சென்னை: கொரோனா பாதிப்பில், தமிழகம் இரண்டாவது நிலையில் தான் உள்ளதாகவும், சமூக பரவலாக மாறவில்லை என சுகாதார செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கண்காணிப்பின் கீழ் 90,415 பேர் உள்ளனர். வீடு முடிந்து 5080 பேர் திரும்பியுள்ளனர். 3,684 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில், நேற்று வரை 309 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இன்று 102 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை …

கொரோனா: சீனாவிடம் இழப்பீடு கேட்கும் சர்வதேச நீதிபதிகள் கவுன்சில் மனு

லண்டன்: கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவ காரணமாக இருந்த சீனாவிடம் இழப்பீடு கேட்டு சர்வதேச நீதிபதிகள் கவுன்சில், ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலை அணுகி உள்ளது இது குறித்து சர்வதேச நீதிபதிகள் கவுன்சில் கூறுகையில் ‘ கொரோனாவை உலக அளவில் பரப்ப காரணமாக இருந்த சீனா உலக அளவில் மக்களிடையே மன அழுத்தத்தையும் சமூக பாதிப்பையும், உலக பொருளாதாரத்தையும் வெகுவாக பாதிப்பு அடைய செய்துள்ளது. இது தொடர்பாக சீனா உலக நாடுகளுக்கு இழப்பீடு …