கரோனா கால ஊரடங்குச் சூழலில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை உடனுக்குடன் அறிந்து உரிய நடவடிக்கைகள் எடுப்பதற்காக கட்டணம் இல்லா உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

எனவே, முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்கள் தேவைகளுக்கு 18004250111 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

மேலும், கேட்கும் மற்றும் பேசும் திறன் அற்றவர்களுக்கு காணொலி மூலம் சைகை மொழியில் தங்களது தேவைகளைத் தெரிவிக்க 9700799993 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். இவ்விரு எண்களும் அனைத்து நாள்களும் 24 மணி நேரமும் செயல்படும்.

மேலும், கரோனா நோய்த் தொற்று குறித்த ஆலோசனைகளை முதியவர்களுக்கு அளிப்பதற்காக காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஆலோசனை மையம் செயல்படும். இந்த ஆலோசனை மையத்தை தொடர்பு கொள்ள 044-28590804 மற்றும் 044-28599188 ஆகிய இரு எண்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *