அடுத்த கல்வி ஆண்டின் தொடக்கத்தில் கல்லூரி பருவத்தேர்வுகள் நடத்தப்படும் என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

சென்னை,

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், நிகழாண்டு செமஸ்டர் தேர்வுகள் எப்போது நடைபெறும் என்ற கேள்விகள் மாணவர்கள் மத்தியில் எழுந்தன. இந்த நிலையில், கோடை விடுமுறை முடிந்து கல்லூரிகள் தொடங்கும் போது, கல்வி ஆண்டின் தொடக்கத்தில் கல்லூரி பருவத்தேர்வுகள் நடைபெறும் என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

கலை அறிவியல், பொறியியல் உள்ளிட்ட அனைத்துக் கல்லூரிகளுக்கும், இந்த ஆண்டில் நடத்தப்பட வேண்டிய பருவத்தேர்வுகள் கல்வி ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறும் என்று தெரிவித்துள்ள உயர்கல்வித்துறை முதலில் தேர்வுகளை நடத்திவிட்டு அடுத்த கல்வியாண்டுக்கான பாடங்கள் தொடங்கும்” என்று தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *