சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கி பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் சரியான செயற்கை சுவாச கருவி வசதி கிடைக்காமல் இறந்தவர்கள் என்ற அதிர்ச்சி தகவல் ஆய்வில் தெரியவந்துள்ளது.

பெய்ஜிங்

உலகையே இப்போது அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் முதன் முதலில் சீனாவில் தான் பரவியது. ஆனால் தற்போது சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் முற்றிலும் குறைந்து உள்ளது. அங்கு மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.

சீனாவில் மட்டும் இந்த கொரோனா வைரஸால் 81,953 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 3,339 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் சீனா கொரோனா விஷயத்தில் சில உண்மைகளை மறைப்பதாக அமெரிக்கா போன்ற சில நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலில், சீனாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் செயற்கை சுவாச கருவி வசதி கிடைக்காமல் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் ஆய்வில் தெரியவந்துள்ளது.

கொரோனாவைரஸ் தாக்கிப் பலியானவர்களில் ஐந்தில் ஒருவருக்கு மட்டுமே முறையான வென்டிலேட்டர் வசதி கிடைத்துள்ளதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.இது தொடர்பான ஆய்வறிக்கையை அமெரிக்க மருத்துவ கழகம் தனது இதழில் வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வு அனைத்தும் உகானில் உள்ள 21 மருத்துவமனகளிலிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது.

அதாவது, மரணத்திற்கு முன்பு ஐந்தில் ஒரு நோயாளிக்குத்தான் அதி தீவிர சுவாச வசதி கிடைத்துள்ளது. மற்றவர்களுக்கு அது சரிவர கிடைக்கவில்லை அல்லது கொடுக்கப்படவில்லை.

ஜனவரி 21 முதல் 30-ஆம் தேதி வரை மொத்தம் 168 நோயாளிகள் கொரோனாவைரஸ் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.தென் கிழக்கு சீன பல்கலைக்கழகத்துக்குட்பட்ட ஷோங்டா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனைத்து நோயாளிகளுக்கும் ஆக்ஸிஜன் தெரப்பி கொடுக்கப்பட்டுள்ளது. அதில் 46 பேருக்கு மட்டும்தான் மூக்கு வழியாக டியூப் போட்டு அல்லது முகத்தில் மாஸ்க் போட்டு ஆக்சிஜன் செலுத்தும் வசதி கிடைத்துள்ளது.மூன்றில் ஒரு நோயாளிக்கு உயர் ஓட்டம் நாசி ஆக்ஸிஜன் சிகிச்சை(high-flow nasal oxygen therapy)வசதி கிடைத்துள்ளது. 72 நோயாளிகளுக்கு காற்றோட்டம் இல்லதா (noninvasive ventilation) வசதி கிடைத்துள்ளது.

34 நோயாளிகளுக்கு மட்டுமே வாய்க்குள் டியூபைப் போட்டு கொடுக்கப்படும் சுவாச கருவி வசதி கிடைத்துள்ளது. பல நோயாளிகள் முறையான சுவாச கருவி வசதி கிடைக்காமல் பலியாகியிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அதேசமயம், வேறு பல காரணங்களும் கூட மரணம் ஏற்பட காரணமாக இருக்கக் கூடும் என்றும் இவர்கள் சொல்கிறார்கள்.சில நோயாளிகளுக்கு ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு மிகவும் குறைவாக இருந்திருக்கிறது. இதனால் அவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டிருக்கிறது. அவர்களுக்கு உடனடியாக செயற்கை சுவாச கருவி வசதி செய்து கொடுக்கப்படவில்லை. அது கிடைத்திருந்தால் அவர்கள் உயிர் பிழைத்திருக்கக் கூடும்.

அவசரம் அவசரமாக மருத்துவப் பணிகளுக்கு அழைக்கப்பட்ட பலருக்கு சரியான பயிற்சி கிடைக்காத காரணத்தால் எந்த நேரத்தில் என்ன மாதிரியான செயற்கை சுவாச கருவி வசதி தர வேண்டும் என்பதில் குழப்பம் ஏற்பட்டு அதில் பலர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது.இறந்த பலரும் அதிக அளவிலான ரத்த அழுத்தம் காரணமாகவே உயிரிழந்துள்ளனர். இதை வைத்துப் பார்க்கும்போது இந்த ஆய்வு முடிவு சரியே என்று நம்பப்படுகிறது.

கொரோனா வைரஸ் மனித உடலில் புகுந்த பின்னர் நுரையீரலைத்தான் குறி வைப்பதாக ஏற்கனவே மருத்துவர்கள் கூறியுள்ளனர். எனவே செயற்கை சுவாச கருவிதான் இந்த சிகிச்சையில் மிக மிக முக்கியமாக தேவைப்படும் ஒன்றாகும்.ஆனால் அது சரியாக கிடைக்காமல் போனதால் பலர் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் அதிர்ச்சி தருவதாக உள்ளது.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *