சென்னை:”தமிழகத்தில் ‘கொரோனா’ வைரஸ் சமூக தொற்றாக பரவவில்லை. எனவே மக்கள் பயப்பட வேண்டாம்; மன வலிமையுடன் இருந்தால் கொரோனா பரவலை ஒழித்து விடலாம்” என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்தில் சமுதாய தொற்றாக பரவாமல் இருக்க மாநில அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த சிறப்பு பேட்டி:சீனாவின் வூஹான் நகரில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது முதல் தமிழகத்தில் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.ஊரடங்கால் உதவிஒருவர் பாதிக்கப்பட்டவர் என்றால் அவருடன் தொடர்பில் இருந்த 100 முதல் 200 நபர்கள் வரை அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
மேலும் கொரோனா பாதித்தவர்களின் வீடுகளை சுற்றி 5 கி.மீ. வரை உள்ள வீடுகளில் இருப்பவர்களையும் கண்காணித்து வருகிறோம்.அமெரிக்காஇத்தாலிஈரான் உள்ளிட்ட நாடுகளில் சமுதாய தொற்றாக பரவி பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.நம் நாட்டில் அந்நிலைமை வராமல் தடுப்பதற்கு பிரதமர் மோடி அறிவித்த ஊரடங்குதமிழக முதல்வர் அறிவித்த 144 தடை பெரும் உதவியாக உள்ளது. ஊரடங்கை மக்கள் சிரமமாக கருதாமல் அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
சமூக தொற்றாகவில்லை
தமிழகத்தில் தற்போது வரை சமூக தொற்றாக பரவில்லை. அதை தடுப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.இதை தவிர தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலை உதவியுடன் ஒரே வெண்டிலேட்டரில் நான்கு பேர் வரை செயற்கை சுவாசம் அளிக்கும் கருவிகள் சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சென்னை ராஜிவ்காந்திஓமந்துாரார் மற்றும் திருச்சி ஆகிய மூன்று மருத்துவமனைகளில் ‘ரோபோ’ வாயிலாக நர்ஸ்களின் பணியை செய்வதற்கான சோதனை முயற்சி நடந்து வருகிறது.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நம் பாரம்பரிய உணவு பொருட்களைமக்கள்சாப்பிடலாம்.

அரசின் அறிவுறுத்தல்களை ஏற்று அடிக்கடி கை கழுவுவதுடன் வெளியே வருவதையும் மக்கள் தவிர்க்க வேண்டும்.உலகளவில் பாதிக்கப்பட்டவர்களில் 2 சதவீதம் பேர் தான் உயிரிழந்துள்ளனர். எனவே கொரோனாவை பார்த்து மக்கள் பயப்பட வேண்டாம். மன வலிமையுடன் மக்கள் இருந்தால் தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுக்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *