புதுடெல்லி,

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்காக ‘ககன்யான்’ என்ற திட்டத்தை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (ஐ.எஸ்.ஆர்.ஓ) செயல்படுத்தி வருகிறது.

அதற்காக இந்திய விண்வெளி வீரர்கள் 4 பேர், ரஷியாவில் உள்ள யூரி ககாரின் என்ற பயிற்சி மையத்தில் கடந்த பிப்ரவரி மாதம் பயிற்சியை தொடங்கினார்கள். 16 மாதங்கள் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட இருந்தது. தற்போது கொரோனா பரவல் காரணமாக அந்த பயிற்சி நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.

மேற்கண்ட தகவலை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய தலைவர் கே.சிவன் தெரிவித்து இருக்கிறார். மேலும் அவர் கூறும்போது, “கொரோனா தடுப்பு பணிகளுக்காக வெண்டிலேட்டர்கள், கிருமிநாசினி பொருட்களை, ‘இஸ்ரோ’ உற்பத்தி செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *