புதுடில்லி: கொரோனா தடுப்பு பணி குறித்தும், அரசுடன் இணைந்து செயல்படுவது குறித்து ஆன்மிக அமைப்புகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

கொரோனா வைரசை கட்டுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடி தினமும் பல்வேறு துறை மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்களை தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தி வருகிறார்.

அதன் அடிப்படையில் நாட்டின் முக்கியமான ஆன்மிக அமைப்புகளை தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, கொரோனா நோய்தொற்று குறித்து ஆலோசனை நடத்தினார். மேலும், இந்த முக்கியமான நேரத்தில், ஆன்மிக அமைப்புகளும், அரசும் இணைந்து மக்களை எப்படி சேவை செய்வது குறித்து ஆலோசித்தார்.

பகவான் ஸ்ரீசத்யசாய் டிரஸ்டி

இந்த ஆலோசனையில், பகவான் ஸ்ரீசத்யசாய் மத்திய டிரஸ்டி மற்றும் பகவான் ஸ்ரீசத்யசாய்சேவை அமைப்புகள் சார்பில் மேனேஜிங் டிரஸ்டி ஆர் ஜே ரத்னாகர் மற்றும் அகில இந்திய தலைவர் நிமிஷ் பாண்டே ஆகியோர் பங்கேற்றனர்.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *