சென்னை: கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, தேசிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை, ‘ஏப்., 5ம் தேதி இரவு 9:00 மணிக்கு, 9 நிமிடங்களுக்கு மின் விளக்குகளை அனைத்து மெழுகுவர்த்தி ஏற்றுங்கள்’ என, பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தினார். ‘இந்த அறிவிப்பு கொரோனா வைரசை அழிக்காது’ எனக்கூறி, பிரதமர் மோடியை, எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

சி.பி.எம்., கட்சியைச் சேர்ந்த ராஜ்யசபா உறுப்பினர், டி.கே.ரங்கராஜன், ‘நோய்நொடிகள் வெம்புலி போல், நூறுவிதம் சீறு வதால், தாய்தந்தையர் பெண்டு பிள்ளை – என் தோழனே, சாய்ந்து விழக் கண்டோமடா’ என்று பாடினார் ஜீவா… இன்றும் மக்களின் நிலைமை இப்படியே இருக்க, கையைத் தட்டுங்கள், விளக்கேற்றுங்கள் என விதவிதமாய் அறிவிப்புகள். நமக்கு வாய்த்திருக்கும் பிரதமர்!’ என, தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சித்திருந்தார்.

எச்.ராஜா

‘குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட உறுதியோடு ஒரு செயலைச் செய்யும் போது ஒற்றுமை, உற்சாகம் ஏற்படும். விளக்கேற்றுவதன் குறிக்கோள் அதுவே. ஆனால் இஸ்லாமைப் போன்ற மற்றொரு அடிப்படை வாத மதமான மார்க்சிய மதத்திற்கு இது புரியாது. என்ன செய்ய தங்களுக்கு வாய்த்த கொள்கை அப்படி. வணக்கம்’ என, டி.கே.ரங்கராஜனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா பதிவிட்டுள்ளார்.
‘இஸ்லாமைப் போல் மற்றொரு அடிப்படை வாத மதம் மார்க்சியம்’ என, எச்.ராஜா குறிப்பிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *