இந்தியா அனுப்பிய மருந்துகள் அமெரிக்காவை சென்று அடைந்தன.

வாஷிங்டன்,

கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு அளிப்பதற்காக ஹைட்ரோக்சிகுளோரோகுயின் மருந்துகளை அளிக்குமாறு இந்தியாவிடம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கேட்டுக்கொண்டார். அதை ஏற்று, இந்த மருந்து ஏற்றுமதிக்கான தடையை இந்தியா நீக்கியது.

அதன்படி, 35 லட்சத்து 82 ஆயிரம் ஹைட்ரோக்சிகுளோரோகுயின் மாத்திரைகள், அவற்றை தயாரிப்பதற்கான 9 டன் மூலப்பொருட்கள் ஆகியவற்றை விமானம் மூலம் இந்தியா அனுப்பி வைத்தது. அந்த விமானம், நேற்று முன்தினம் அமெரிக்காவின் நெவார்க் விமான நிலையத்தை அடைந்தது.

இந்த தகவலை அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித்சிங் சாந்து தெரிவித்தார்.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *