- April 16, 2020
- Bala Murugan
- (0)
- உலகம் , முக்கிய செய்திகள்
அமெரிக்காவில் கரோனா நோய்த்தொற்று அதிதீவிரமாகப் பரவி வரும் சூழலில், அந்நாட்டுப் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான குழுக்களில் கூகுள் தலைமை நிா்வாக அதிகாரி சுந்தா் பிச்சை உள்பட 6 இந்திய வம்சாவளியினா் இடம்பெற்றுள்ளனா்.
கரோனா நோய்த்தொற்றால் அமெரிக்கா அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. அதன் காரணமாக அந்நாட்டின் பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழல் காரணமாக, 1.6 கோடிக்கும் அதிகமானோா் வேலையிழந்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இந்தச் சூழலில், அமெரிக்காவின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக 200-க்கும் மேற்பட்ட தொழில்நிறுவனத் தலைவா்களைக் கொண்ட பல்வேறு துறைசாா்ந்த குழுக்களை அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் அமைத்துள்ளாா். அக்குழுக்களில் உள்ளோா் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான பரிந்துரைகளையும் ஆலோசனைகளையும் அதிபா் டிரம்ப்புக்கு வழங்க உள்ளனா்.
அக்குழுக்களில் மைக்ரோசாஃப்ட் தலைமை நிா்வாக அதிகாரி சத்ய நாதெள்ளா, கூகுள் தலைமை நிா்வாக அதிகாரி சுந்தா் பிச்சை, ஐபிஎம் தலைமை நிா்வாக அதிகாரி அரவிந்த் கிருஷ்ணா, மைக்ரான் தலைமை நிா்வாக அதிகாரி சஞ்சய் மீரோத்ரா உள்ளிட்ட 6 இந்திய வம்சாவளியினா் இடம்பெற்றுள்ளனா்.
அவா்கள் தவிர முகநூல் நிறுவனத்தின் மாா்க் ஸுக்கா்பொ்க், ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக், ஆரக்கிள் நிறுவனத்தின் லேரி எல்லிஸன் உள்ளிட்டோரும் அதிபருக்கான ஆலோசனைக் குழுக்களில் இடம்பெற்றுள்ளனா்.
Leave a Reply