வாஷிங்டன்: கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் உச்சத்தை எட்டிவருகிறது. தற்போது வரை, 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும், 10 லட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக அமெரிக்காவில், 2.45 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பல லட்சம் மக்கள் வேலையிழந்துள்ளனர். இதனால் லட்சக்கணக்கான குடும்பங்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளன. அடுத்த வேளை உணவுக்கு கூட வழியற்ற சூழலில், பல குடும்பங்கள் தவித்து …
அனைத்து மதத் தலைவர்களுடன் தலைமைச்செயலாளர் இன்று ஆலோசனை
அனைத்து மதத் தலைவர்களுடன் தலைமைச்செயலாளர் சண்முக இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை, அனைத்து மதத் தலைவர்களுடன் இன்று பிற்பகல் 3 மணிக்கு தமிழக தலைமைச்செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா குறித்து மத ரீதியாக கருத்துக்கள் வெளியாவதை தவிர்க்க வேண்டுமென இந்த ஆலோசனையின் போது வலியுறுத்தப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா தனது நாட்டினரை இந்தியாவில் இருந்து அனுப்ப தொடங்குகியது – தூதரக அதிகாரி
நாடு திரும்ப விரும்பும் தனது நாட்டினரை திருப்பி அனுப்பத் தொடங்கியுள்ளதாக மூத்த அமெரிக்க தூதர் ஒருவர் தெரிவித்துள்ளார். வாஷிங்டன் 60 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள 30,000 க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் 350 க்கும் மேற்பட்ட விமானங்களில் அமெரிக்கா திரும்பி உள்ளனர் கொரோனா வைரஸ் தொற்றுநோயைப் பரவுவதைத் தடுக்க இந்தியாவில் 21 நாள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு நிலையில் உள்ள இந்தியாவில் இருந்து, நாடு திரும்ப விரும்பும் தனது நாட்டினரை திருப்பி அனுப்பத் தொடங்கியுள்ளதாக மூத்த அமெரிக்க தூதர் …
ஊரடங்கு மீறுபவர்கள் சுட்டுக்கொல்லப்படுவார்கள் என்று பிலிப்பைன்ஸ் அதிபர்
ஊரடங்கு மீறுபவர்கள் சுட்டுக்கொல்லப்படுவார்கள் என்று பிலிப்பைன்ஸ் அதிபர் அந்நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். மணிலா, சீனாவின் ஹூபெய் மாகாணம் உகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தெற்காசிய நாடுகளில் ஒன்றான பிலிப்பைன்சிலும் கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்துள்ளது. பிலிப்பைன்சில் தற்போதைய நிலவரப்படி 2,633 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 107 பேர் மீண்ட நிலையில், 51 – பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலைக்கட்டுப்படுத்தும் வகையில், …
புதிதாக பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா- கோவிட் என பெயர்
புதிதாக பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா- கோவிட் என தம்பதியினர் பெயரிட்டு உள்ளனர் ராய்ப்பூர் கொரோனா வைரஸால் ஏற்பட்ட தொற்றுநோய் உலகை ஆட்டுவித்து வருகிறது. அனைத்து நாடுகளும் கொரோனா தொற்றால் ஊரடங்கை அறிவித்து உள்ளன. இந்த நிலையில் சமீபத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு கொரோனா என பெயர் சூட்டி மகிழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் சத்தீஸ்காரில் ஒரு தம்பதியினருக்கு இரட்டை குழந்ததைகள் பிறந்தது. அவர்கள் குழந்தைகளுக்கு‘கொரோனா’மற்றும் ‘கோவிட்’என்று பெயரிட்டு உள்ளனர். இருப்பினும், தம்பதியினர் பின்னர் தங்கள் முடிவை மாற்றி …
கொரோனாவுக்கு எதிரான போர் இப்போதுதான் தொடங்கி இருக்கிறது ‘அனைவரும் ஒன்றுபட்டு போராடுவோம்’ – பிரதமர் மோடி வேண்டுகோள்
முதல்-மந்திரிகளுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, கொரோனாவுக்கு எதிரான போர் இப்போதுதான் தொடங்கி இருப்பதாகவும், இந்த நோய்க் கிருமியை ஒழிக்க அனைவரும் ஒன்றுபட்டு போராடவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். புதுடெல்லி, மனித குலத்தை அச்சுறுத்தி வரும் கண்ணுக்கு தெரியாத எதிரியான கொரோனாவை ஒழிக்க உலக நாடுகள் போராடிக்கொண்டு இருக்கின்றன. கொரோனா வைரஸ் தாக்கியதில் உலகம் முழுவதும் 47 ஆயிரத்துக்கும் அதிகமான பேர் பலியாகி உள்ளனர். 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நோய்க் …
சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் – ஒன்று கூடி விளக்கு ஏற்ற கூடாது; பிரதமர் மோடி
வரும் ஏப்.5ம் தேதி இரவு 9 மணிக்கு வீட்டு மின்மிளக்குகளை 9 நிமிடங்கள் அணைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். புதுடெல்லி, பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்டார். அதில் கூறியதாவது;- ஊரடங்கை மதித்து நடக்கும் நாட்டு மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நாம் எடுக்கும் நடவடிக்கைகளை உலக நாடுகள் பின்பற்றி வருகின்றன. இந்தியாவின் மக்கள் ஊரடங்கு உலகுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறது. கொரோனாவை எதிர்கொள்வதில் உலகிற்கே இந்தியா முன்மாதிரியாக உள்ளது. வீட்டில் …
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 336 பேருக்கு கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 336 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக 56 பேர் உயிரிழந்து இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,301 ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சகம், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 336 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. கொரோனா பாதித்தவர்களில் 157 பேர் சிகிச்சைக்குப் …
கரோனா பாதிப்பு புள்ளிவிவரங்களை மறைக்கிறது சீனா: அமெரிக்கா குற்றச்சாட்டு
வாஷிங்டன்: சீனாவில் கரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டோரின் உண்மையான எண்ணிக்கையை வேண்டுமென்றே குறைத்து தெரிவித்துள்ளதாக அமெரிக்க உளவுத்துறை அறிக்கை அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வூஹானில் கண்டறிந்து பரவத் தொடங்கிய கரோனா நோய்த்தொற்று உலகம் முழுவதும் 200க்கும் அதிகமான நாடுகளில் பரவி பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. கரோனாவின் தோற்றுவாயான சீனாவில் 82,361 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 3,305 …
கொரோனா நிவாரணம்… 1000 ரூபாயுடன் இலவச ரேசன் பொருட்கள் வழங்கும் பணி தொடங்கியது
தமிழகத்தில் கொரோனா நிவாரணமாக 1000 ரூபாயுடன் இலவச ரேசன் பொருட்கள் விநியோகம் இன்று தொடங்கியது. ரேசன் கடைகளில் மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க டோக்கன் வழங்கப்பட்டு பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. கொரோனா நிவாரணம்… 1000 ரூபாயுடன் இலவச ரேசன் பொருட்கள் வழங்கும் பணி தொடங்கியது சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ள நிலையில், அவர்களுக்கு …