அனைத்து மளிகைக் கடைகளிலும் இன்று முதல் விலைப்பட்டியல்

ஊரடங்கைப் பயன்படுத்தி மளிகைக் கடைகளில் அதிக விலையில் பொருள்கள் விற்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், வியாழக்கிழமை முதல் அனைத்துக் கடைகளிலும் விலைப்பட்டியல்கள் வைக்கப்படவுள்ளன. கரோனா பரவுதலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில், மளிகைப் பொருள்கள், பொதுமக்களுக்கு தடையின்றி கிடைக்கும் வகையில் சரக்கு வாகனங்கள் போக்குவரத்துக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. மேலும், உணவுப் பொருள்களை பதுக்கினாலோ, அதிக விலைக்கு விற்பனை செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட, மாநகராட்சி நிா்வாகங்கள் …

நேரு உள்விளையாட்டரங்கம் உள்பட 1,000 இடங்களில் கரோனா வாா்டுகள் அமைக்க நடவடிக்கை

சென்னை நேரு உள்விளையாட்டரங்கம், நந்தம்பாக்கம் வா்த்தக மையம் உள்பட தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது இடங்களில் கரோனா சிகிச்சைக்கான வாா்டுகள் அமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேரு உள்விளையாட்டரங்கில் ஆயிரம் படுக்கைகளும், நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில் 600 படுக்கைகளும், அம்பத்தூா் தொழிற்பேட்டை உற்பத்தியாளா்கள் சங்க (அய்மா) வளாகத்தில் 300 படுக்கைகளும் கூடிய கரோனா வாா்டுகள் அமைக்கப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை …

ஊரக தொழில் நிறுவனங்கள் ஏப். 20 முதல் இயங்கலாம்

நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கை ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் தளா்த்துவதற்கான விதிமுறைகளை மத்திய அரசு புதன்கிழமை வெளியிட்டது. அதன்படி, ஊரகப் பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் சமூக இடைவெளியை முறையாகக் கடைப்பிடித்து ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கரோனா நோய்த்தொற்று (கொவைட்-19) பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நாடு முழுவதும் மே மாதம் 3-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக பிரதமா் நரேந்திர மோடி கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தாா். இந்தச் சூழலில் …

ஊரடங்கையொட்டி தமிழகத்தில் எடுக்க வேண்டிய தொடர் நடவடிக்கைகள் என்ன? – எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை

பிரதமர் அறிவித்துள்ள ஊரடங்கையொட்டி தமிழகத்தில் எடுக்க வேண்டிய தொடர் நடவடிக்கைகள் குறித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நேற்று ஆலோசனை நடந்தது. சென்னை, கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் கடந்த 14-ந்தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. கொரோனா பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழகத்தில் ஊரடங்கினை வருகிற 30-ந்தேதி வரையிலும் நீட்டித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் நாட்டு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது …

பொதுமக்களுக்கு நேரடியாக உணவு வழங்க அரசு பிறப்பித்த தடையை எதிர்த்து தி.மு.க., ம.தி.மு.க. வழக்கு – ஐகோர்ட்டில் இன்று தீர்ப்பு

தேசிய ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உணவு, அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்டவைகளை நேரடியாக வழங்க விதிக்கப்பட்ட தமிழக அரசின் தடை உத்தரவை எதிர்த்து தி.மு.க., ம.தி.மு.க. சார்பில் தொடரப்பட்ட வழக்குகளில் இன்று தீர்ப்பு கூறப்படுகிறது. சென்னை. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் உணவு, அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்டவை கிடைக்காமல் சிரமத்துக்கு ஆளானவர்களுக்கு அரசியல் கட்சிகள், தன்னார்வ தொண்டு அமைப்புகள், தனிநபர்கள் உதவிகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில், பொதுமக்களுக்கு உணவு …

ரூ.8 கோடி மதிப்புள்ள கொரோனா தொற்று கண்டறியும் கருவிகளை அளித்த டாடா நிறுவனம் – முதல்-அமைச்சர் நன்றி

ரூ.8 கோடி மதிப்புள்ள கொரோனா தொற்று கண்டறியும் கருவிகளை அளித்த டாடா நிறுவனத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். சென்னை, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது. தமிழ்நாடு அரசுக்கு தோள் கொடுக்கும் விதமாக பொதுமக்களும், நிறுவனங்களும், அமைப்புகளும் கொரோனா நோய் நிவாரண நடவடிக்கைகளுக்காக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தங்களின் பங்களிப்பை மனமுவந்து அளித்து வருகின்றன. மேலும், …

ஊரடங்கு காலத்தில் வேளாண்மை தடைபடாமல் அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்னென்ன? – அரசு முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி விளக்கம்

ஊரடங்கு காலத்தில் வேளாண்மை தடைபடாமல் அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றி அந்தத் துறையின் முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி விளக்கம் அளித்துள்ளார். சென்னை, வேளாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி, தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:- கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள ஊரடங்கு காலத்தில் சாகுபடிப் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதற்கும், விவசாயிகள் உற்பத்தி செய்த விளைபொருட்களை எவ்வித தடையுமின்றி விற்பனை செய்வதற்கும் வேளாண்மைத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு …

பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிப்போக வாய்ப்பு

பள்ளி திறப்பு தேதி தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாகவே கூறப்படுகிறது. சென்னை, கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டு இருக்கின்றன. பிளஸ்-1 பொதுத்தேர்வின் இறுதி தேர்வும், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வும் தள்ளிவைக்கப்பட்டது. அதேபோல், 1 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அனைவரும் ஆண்டின் இறுதி தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றதாக அரசால் அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே நடைபெற்று முடிந்த பிளஸ்-2 பொதுத்தேர்வு மற்றும் நடத்தி முடிக்கப்பட்ட …

கொரோனா மருந்து இல்லை என்றால்: அமெரிக்காவில் 2022 வரை சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும்

விரைவில் கொரோனாவுக்கான மருந்து கண்டறியப்படவில்லை என்றால், அமெரிக்காவில் 2022வரை சமூக விலகலை கடைபிடிக்க வேண்டி இருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். வாஷிங்டன் உலகம் முழுவதும் 19 லட்சத்து 97 ஆயிரத்து 620 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது, இதுவரையிலும் 4 லட்சத்துக்கு 78 ஆயிரத்து 425 பேர் குணமாகியுள்ளனர்.தற்போது அமெரிக்காவில் மட்டும் 6 லட்சம் பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.நேற்று ஒரே நாளில் மட்டும் 2 ஆயிரத்து 407 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அமெரிக்காவில் வைரஸ் …

இந்தியாவில் 170 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் – மத்திய அரசு தகவல்

இந்தியாவில் கொரோனாவால் 170 மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து நேற்று அவர் டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- புதுடெல்லி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,076 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இவர்களையும் சேர்த்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 439 ஆக அதிகரித்து இருக்கிறது. உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 377 ஆக …