பெண்கள் புகார் செய்ய அதிகாரிகளின் செல்போன் எண்களை அறிவிக்கக்கோரி வழக்கு – ஐகோர்ட்டு நோட்டீஸ்

ஊரடங்கினால் குடும்ப வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும், பாதிக்கப்படும் பெண்கள் புகார் செய்ய பாதுகாப்பு அலுவலர்களின் செல்போன் எண்ணை விளம்பரம் செய்யவேண்டும் என்றும் தொடரப்பட்ட வழக்கிற்கு தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. சென்னை, சென்னை ஐகோர்ட்டில் வக் கீல் சுதா ராமலிங்கம் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:- கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்னர் உலகம் முழுவதும் …

தேர்வுகள், வகுப்புகள் குறித்த புதிய அட்டவணை விரைவில் வெளியிடப்படும் – அண்ணா பல்கலைக்கழகம் தகவல்

தேர்வுகள், வகுப்புகள் குறித்த புதிய அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. சென்னை, கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கும் நிலையில், நடப்பாண்டுக்கான இறுதி செமஸ்டர் தேர்வுகள், அடுத்த கல்வியாண்டின் தொடக்கத்தில் நடத்தப்படும் என்று உயர்க்கல்வி துறை அறிவித்து இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக அண்ணா பல்கலைக்கழகம் அதன் கீழ் செயல்படும் என்ஜினீயரிங் கல்லூரிகள் மற்றும் உறுப்பு கல்லூரிகளுக்கு அது தொடர்பாக அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் வளாக கல்லூரிகள், அதன் …

கொரோனா பாதிப்பு தடுப்பு பணிக்கு தமிழகத்தில் 2 ஆயிரத்து 215 தற்காலிக சுகாதார ஆய்வாளர்கள் – பொது சுகாதாரத்துறை உத்தரவு

கொரோனா பாதிப்பு தடுப்பு பணிக்கு தமிழகத்தில் 2 ஆயிரத்து 215 தற்காலிக சுகாதார ஆய்வாளர்கள் பணி அமர்த்த பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. சென்னை, தமிழகத்தில் காலியாக உள்ள மருத்துவ ஆய்வாளர் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்ப தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அதன் அடிப்படையில் பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி இந்த பணிக்காக ‘அவுட்சோர்சிங்’ முறையில் 2 ஆயிரத்து 215 சுகாதார ஆய்வாளர்களை பணி அமர்த்த உத்தரவிட்டார். உத்தரவு வருமாறு:- தமிழக அரசின் அரசாணைபடி கொரோனா தடுப்பு …

ஒரே நாளில் 1,076 பேருக்கு நோய் தொற்று; இந்தியாவில் கொரோனா பாதிப்பு 13,835 ஆக உயர்வு

இந்தியாவில் ஒரே நாளில் 1,076 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து, இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 13,835 ஆக உயர்ந்துள்ளது. புதுடெல்லி, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று மாலை வெளியிட்ட புள்ளிவிவரத்தில், இந்த வைரஸ் தொற்றால் இந்தியாவில் 13,835 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கையும் 452 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரசால் நேற்று முன்தினம் வரை 12,759 பேர் …

ஊரடங்கு நாட்களில் ஊரக பகுதி கட்டுமான பணிகளுக்கு புதிய விதிவிலக்கு – மத்திய அரசு அறிவிப்பு

ஊரடங்கு நாட்களில் ஊரக பகுதிகளில் கட்டுமான பணிகளை மேற்கொள்வது தொடர்பாக புதிய விதிவிலக்குகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. புதுடெல்லி, கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் மே 3-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதை தொடர்ந்து, கடந்த புதன்கிழமை சில கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியது. சில நிபந்தனைகளுடன் கட்டுமான பணிகள் நடைபெறலாம் என்றும், தொழிற்சாலைகள் இயங்கலாம் என்றும் அறிவித்தது. ஊரக பகுதிகளில் கட்டுமான பணிகளை மேற்கொள்வது தொடர்பாக மேலும் சில கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தி இருக்கிறது. அதாவது …

நுரையீரலை மட்டுமல்லாது கொரோனா வைரஸ், சிறுநீரகத்தையும் பாதிக்கும் – புதிய தகவலால் பரபரப்பு

கொரோனா வைரசானது நுரையீரலை மட்டுமல்லாது சிறுநீரகத்தையும் பாதிக்கும் என வெளியாகியுள்ள புதிய தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுடெல்லி, உலகமெங்கும் பரவி வருகிற கொரோனா வைரஸ் தொற்றுநோய், நோயாளிகளின் நுரையீரலை பாதித்து விடுகிறது. இதனால் சுவாசிக்க முடியாத நிலைக்கு நோயாளிகள் தள்ளப்பட்டு, நிலைமை மோசமாகிறது. இதுபற்றிய விழிப்புணர்வு இப்போது ஓரளவுக்கு எல்லோருக்கும் வந்து விட்டது. இந்த நிலையில், இந்த வைரஸ், நுரையீரலை மட்டுமல்லாது சிறுநீரகத்தையும் பாதிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். சர்வதேச சிறுநீரக சொசைட்டியும் இது …

30 கோடி டன் உணவு தானிய உற்பத்தி – மத்திய அரசு இலக்கு

2020-2021 சாகுபடி ஆண்டில் 30 கோடி டன் உணவு தானியங்கள் உற்பத்தி செய்ய மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. புதுடெல்லி, ஜூலை மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காலம், சாகுபடி ஆண்டாக கருதப்படுகிறது. 2019-2020 சாகுபடி ஆண்டில், 29 கோடியே 20 லட்சம் டன் உணவு தானியம் உற்பத்தி ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், 2020-2021 சாகுபடி ஆண்டில் சம்பா பயிர்கள் விதைப்பு பணி குறித்து மத்திய வேளாண் அமைச்சகத்தின் ஆணையாளர் எஸ்.கே.மல்கோத்ரா அனைத்து மாநில …

சென்னையில் 79% குற்றங்கள் குறைந்தன: காவல்துறை தகவல்

ஊரடங்கு காலத்தில் சென்னையில் அனைத்து குற்றங்களும் 79% குறைந்துள்ளதாக சென்னை மாநகர காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கின்றனர். இதனால் சென்னை மாநகரில் குற்றங்களும் பெருமளவில் குறைந்துள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னையில் கொலை வழக்கில் 44%, கொள்ளை வழக்கில் 75%, வீடு புகுந்து திருடுதல் வழக்கில் 59% , திருட்டு வழக்கில் 81%, விபத்து சிறப்புகளில் 75% என ஒட்டுமொத்தமாக 79% அனைத்து குற்றங்களும் …

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

தஞ்சாவூர்: கரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது எனத் துணைவேந்தர் கோ. பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது: கரோனா நோய்த் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. எனவே, 2019-20 கல்வியாண்டின் இறுதியில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த வளாகக் கல்வித் தேர்வுகளும், மே 2ஆம் தேதி தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த தொலைநிலைக் கல்வி …

அத்தியாவசிய பொருட்களை பதுக்கினால் தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும்- அமைச்சர் எச்சரிக்கை

அத்தியாவசிய பொருட்களை கூடுதல் விலைக்கு விற்றாலோ அல்லது பதுக்களில் ஈடுபட்டாலோ அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என்று அமைச்சர் காமராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் நல வாரிய உறுப்பினர்களுக்கு விலையில்லா நிவாரண பொருட்கள் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் அறிவித்திருந்தார். அதன்படி திருவாரூர் விளமல் பகுதியில் உள்ள நியாய விலை கடையில் கட்டுமான தொழிலாளர் மற்றும் …

You cannot copy content of this page