ஐகோர்ட்டு, மதுரை கிளை உள்பட தமிழகம், புதுச்சேரி முழுவதும் உள்ள கோர்ட்டுகளுக்கு கோடை விடுமுறை ரத்து

ஐகோர்ட்டு, மதுரை கிளை, தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் உள்ள அனைத்து கோர்ட்டுகளுக்கும் மே மாதம் விடப்படும் கோடை விடுமுறையை ரத்து செய்து, சென்னை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். சென்னை, கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், நீதிமன்றங்கள் அனைத்தும் மூடப்பட்டு, அவசர வழக்குகளை மட்டும் விசாரித்து வருகிறது. தமிழகத்தில் ஐகோர்ட்டு உள்பட அனைத்து நீதிமன்றங்களின் பணிகளும் கடந்த மார்ச் 24-ந்தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. முக்கியமான அவசர …

இந்திய உணவு கழகம் சார்பில் மானிய விலையில் அரிசி, கோதுமை விற்பனை – மத்திய அரசு அதிரடி உத்தரவு

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையில் மத்திய அரசு அறிவித்த புதிய திட்டத்தின்படி இந்திய உணவு கழகம் அரிசி கிலோ ரூ.22-க்கும், கோதுமை கிலோ ரூ.21-க்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு நேரடியாக விற்பனை செய்து வருகிறது. சென்னை, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர போர்க்கால அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. குறிப்பாக வெளிமாநிலங்களில் இருந்து வந்துள்ள தொழிலாளர்கள் …

மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கான ஒருநாள் ஊதியம் ரூ.256-ஆக உயர்வு – தமிழக அரசு உத்தரவு

மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வரும் தொழிலாளர்களுக்கான ஒருநாள் ஊதியத்தை ரூ.229-ல் இருந்து ரூ.256-ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை, இதுதொடர்பாக ஊரக மேம்பாடு மற்றும் ஊராட்சித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 100 நாட்கள் வேலையில் உள்ள தொழிலாளர்களின் தினசரி ஊதியத்தை ஏப்ரல் 1-ந் தேதியில் இருந்து அனைத்து மாநிலங்களும் திருத்தி …

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 5 லட்சம் பேர் குணம் அடைந்தனர்

உலக அளவில் கொரோன வைரசால் பாதிக்கப்பட்ட 5 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பாரீஸ், 193 உலக நாடுகளில் கொரோனா வைரஸ் தன் ஆதிக்கத்தை தொடர்ந்து நிலைநாட்டி வருகிறது. நேற்றைய நிலவரப்படி உலகமெங்கும் உள்ள 22.75 லட்சத்துக்கும் அதிகமானோரை இந்த வைரஸ் தாக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இவர்களில் பாதிப்பேர் ஐரோப்பியர்கள் (11 லட்சத்து 15 ஆயிரத்து 500-ஐ கடந்து விட்டது) என்பது குறிப்பிடத்தகுந்த அம்சம். உலக அளவில் கொரோனா தாக்கியதில் 4 லட்சத்து 97 …

சீன ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டதா கொரோனா வைரஸ்? – அமெரிக்கா விசாரணை நடத்துவதாக டிரம்ப் அறிவிப்பு

சீன ஆய்வுக்கூடத்தில் கொரோனா வைரஸ் செயற்கையாக உருவாக்கப்பட்டதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து அமெரிக்கா விசாரணை நடத்துவதாக அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார். வாஷிங்டன், உலகையே அச்சுறுத்தி வருகிற கொரோனா வைரஸ், சீனாவின் மத்திய நகரமான உகானில் உள்ள கடல்வாழ் உயிரினங்கள் விற்பனை சந்தையில் இருந்து உருவானது என்று நீண்ட காலமாக சொல்லப்பட்டு வருகிறது. இதுகுறித்த தகவல்கள் வெளி உலகுக்கு வரத்தொடங்கியதும் அந்த சந்தையும் மூடப்பட்டது. இன்று வரை அந்த சந்தை திறக்கப்படவே இல்லை. மூடிதான் …

அமெரிக்காவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டியது – ‘நமக்கு நேர்ந்தது பயங்கரம்’ என டிரம்ப் ஒப்புதல்

அமெரிக்காவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7 வட்சத்தை தாண்டியது. நமக்கு நேர்ந்தது பயங்கரமான விஷயம் என்று அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் ஒப்புக்கொண்டுள்ளார். வாஷிங்டன், சீன நாட்டின் உகான் நகரில் தோன்றினாலும், கொரோனா வைரஸ் தொற்று நோய், அமெரிக்காவை பிடித்து ஆட்டுவித்து வருகிறது. உலகின் பிற எந்த நாட்டைக்காட்டிலும் அமெரிக்காவில் இதன் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. அந்த வகையில் அங்கு பால்டிமோர் நகரில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா வைரஸ் தடுப்பு மையம் …

மும்பையில் கடற்படை வீரர்கள் 26 பேருக்கு கொரோனா தொற்று – தனிமைப்படுத்தி சிகிச்சை

மும்பையில் கடற்படை வீரர்கள் 26 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர்களை தனிமைப்படுத்தி வைத்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். மும்பை, கொரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு விதிக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும், நோய்த்தொற்று பரவுவதை முற்றிலுமாக தடுக்க முடியவில்லை. இந்திய ராணுவத்திலும் இந்த நோய்த்தொற்று பரவி விட்டது. இந்திய ராணுவ வீரர்கள் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து, போர்க்கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் கடற்படை தளங்களில் கொரோனா …

நாளை முதல் இயங்கும் தொழில்கள் எவை? – மத்திய அரசு பட்டியலை வெளியிட்டது

நாளை முதல் இயங்கும் தொழில்கள் எவை, எவை என்பது குறித்து மத்திய அரசு பட்டியலை வெளியிட்டுள்ளது. புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமாக உள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை நெருங்கி வரும் நிலையில், பலி எண்ணிக்கையும் 500-ஐ எட்டுகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஏற்கனவே நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு மே 3-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை பிரதமர் மோடி அண்மையில் வெளியிட்டார். அப்போது, அவர் கொரோனா …

இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 500-ஐ நோக்கி நகர்கிறது – 2,014 பேர் குணமடைந்தனர்

இந்தியாவில் கொரோனாவுக்கு 452 பேர் பலியாகி இருந்த நிலையில் 24 மணி நேரத்துக்குள் மேலும் 36 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 500-ஐ நோக்கி நகர்கிறது. இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து 2,014 பேர் குணமடைந்துள்ளனர். புதுடெல்லி, உலகம் முழுவதும் தனது கோர முகத்தை காட்டி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதுவரை தடுப்பு மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், கொரோனா பரவலை தடுக்க சமூக விலகலே அவசியம் …

இந்தியாவில் சிக்கி தவிக்கும் வெளிநாட்டினரின் விசா காலம் மே 3-ந் தேதி வரை நீட்டிப்பு – மத்திய அரசு அறிவிப்பு

இந்தியாவில் சிக்கி தவிக்கும் வெளிநாட்டினரின் விசா காலம் மே 3-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. புதுடெல்லி, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு சுற்றுலாவாகவும், பணி நிமித்தமாகவும் ஏராளமானோர் வருகிறார்கள். கொரோனா பாதிப்பின் காரணமாக இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. இதேபோல் மற்ற நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. இதனால் இந்தியாவுக்கு வந்த வெளிநாடுகளைச் சேர்ந்த பலர் தங்கள் …