இதயத்துடிப்பை அறிய ‘ஸ்மாா்ட் ஸ்டெதஸ்கோப்’ ஐஐடி ஆராய்ச்சியாளா்கள் கண்டுபிடிப்பு

கரோனா நோயாளிகளின் இதயத்துடிப்பை தூரத்தில் இருந்தே கேட்கும் வகையில் ‘ஸ்மாா்ட் ஸ்டெதஸ்கோப்’பை மும்பை ஐஐடி ஆராய்ச்சியாளா்கள் உருவாக்கியுள்ளனா். இதுகுறித்து ஆராய்ச்சியாளா்கள் கூறியதாவது: மும்பை இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தால் (ஐஐடி-பி) இதற்கு காப்புரிமை பெறப்பட்டுள்ளது. மருத்துவரிடம் ஆலோசனை பெற வருபவரின் மாா்பின் மீது இந்த நவீன ஸ்டெதஸ்கோப்பை வைக்கத் தேவையில்லை. அவருடைய இதயத்துடிப்பின் ஒலி, ‘புளூடூத்’ தொழில்நுட்பம் வழியாக மருத்துவரின் ஸ்டெதஸ்கோப்புக்கு அனுப்பப்படுகிறது. இதன்மூலம், நோயாளிக்கு அருகே மருத்துவா்கள் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்த ஒலியை பதிவு …

ஊரடங்கை நீட்டித்தால் ‘பகுஜன் சமாஜ் கட்சி வரவேற்கும்’ – மாயாவதி சொல்கிறார்

21 நாள் ஊரடங்கை மத்திய அரசு நீட்டித்தால் அதை பகுஜன் சமாஜ் கட்சி வரவேற்கும் என்று மாயாவதி கூறியுள்ளார். லக்னோ, கொரோனா வைரஸ் பரவி வருவதை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு, நாளை மறுதினம் 14-ந் தேதி முடிகிறது. இதை நீட்டிக்க வேண்டும் என்று பல தரப்பிலும் கோரிக்கை எழுந்துள்ளது. இந்த நிலையில், ஊரடங்கை நீட்டித்தால் அதை பகுஜன் சமாஜ் கட்சி வரவேற்கும் என்று அதன் தலைவர் …

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியில் கொரோனா வைரசுக்கு எதிரான நடவடிக்கையில் இந்தியாவுக்கு 100 மதிப்பெண்கள்

கொரோனா வைரசுக்கு எதிரான உலக நாடுகளின் நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து வந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், இந்தியாவுக்கு 100-க்கு 100 மதிப்பெண்கள் வழங்கி உள்ளது. புதுடெல்லி, கண்களுக்குத் தெரியாத கொரோனா வைரசுக்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து போர் தொடுத்துள்ளன. ஆனாலும் “விட்டேனா பார்” என்கிற ரீதியில் எல்லா நாடுகளிலும் தன் ஆதிக்கத்தை நாளுக்கு நாள் அந்த வைரஸ் பரப்பிக்கொண்டே போகிறது. இந்தநிலையில் கொரோனா வைரசுக்கு உலக நாடுகள் எப்படி பதில் அளிக்கின்றன, தடுப்பு நடவடிக்கைகளை எப்படி …

கொரோனா பரவல் எதிரொலி: ரஷியாவில் இந்திய விண்வெளி வீரர்களுக்கான பயிற்சி நிறுத்தம்

புதுடெல்லி, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்காக ‘ககன்யான்’ என்ற திட்டத்தை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (ஐ.எஸ்.ஆர்.ஓ) செயல்படுத்தி வருகிறது. அதற்காக இந்திய விண்வெளி வீரர்கள் 4 பேர், ரஷியாவில் உள்ள யூரி ககாரின் என்ற பயிற்சி மையத்தில் கடந்த பிப்ரவரி மாதம் பயிற்சியை தொடங்கினார்கள். 16 மாதங்கள் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட இருந்தது. தற்போது கொரோனா பரவல் காரணமாக அந்த பயிற்சி நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. மேற்கண்ட தகவலை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய தலைவர் கே.சிவன் …

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டியது

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டியது. புதுடெல்லி, சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா தனது கோர முகத்தை காட்டி வருகிறது. வைரஸ் பரவுவதை கட்டுப் படுத்த நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதுடன் பல்வேறு நடவடிக்கைகளையும் மத்திய-மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. ஆனாலும் கொரோனா தனது தாக்குதலை நிறுத்தவில்லை. மாறாக வைரசால் நாளுக்குநாள் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மத்திய …

டாக்டர்களுக்கும், சுகாதார ஊழியர்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு – மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

கொரோனா வைரஸ் சிகிச்சையில் ஈடுபடும் டாக்டர்களுக்கும், சுகாதார ஊழியர்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. புதுடெல்லி: கொரோனா வைரசால் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, ஆஸ்பத்திரிகளுக்கும், பரிசோதனை மையங்களுக்கும், தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கும் செல்கிற டாக்டர்கள், நர்சுகள், சுகாதாரப்பணியாளர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேச நிர்வாகங்களுக்கும் மத்திய அரசு நேற்று அதிரடியாக உத்தரவிட்டது. இதையொட்டி மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச்செயலாளர் புண்யா சலிலா ஸ்ரீவஸ்தவா டெல்லியில் …

தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் – கைது 1.50 லட்சத்தை தாண்டியது

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக கைது செய்யப்பட்டவரின் எண்ணிக்கை 1.50 லட்சத்தை தாண்டியது. ஒரு லட்சத்து 20 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. சென்னை: கொரோனா நோயின் பிடியில் மக்கள் சிக்காமல் இருப்பதற்கான தடுப்பு மருந்தாக ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்தது. 21 நாட்கள் அடங்கிய இந்த ஊரடங்கு நேற்று 18-வது நாளாக கடைபிடிக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவுக்கு சிலர் அடங்கி வீட்டில் இருந்தாலும், சிலர் தேவையின்றி அன்றாடம் சாலைகளில் சுற்றுவதை வழக்கமாக கொண்டு உள்ளனர். …

பீகாரில் ஒரே குடும்பத்தில் 23 பேருக்கு கொரோனா பாதிப்பு

பீகாரில் உள்ள கிராமத்தில் ஒரே குடும்பத்தில் 23 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதும், ஓமன் நாட்டில் இருந்து திரும்பிய இளைஞர் மூலம் பரவியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாட்னா: பீகார் மாநிலம் சிவான் மாவட்டத்தில் சிறுபான்மையின மக்கள் கணிசமாக வாழ்கிறார்கள். சுமார் 60 ஆயிரம் பேர் வளைகுடா நாடுகளில் வேலை செய்து வருகிறார்கள். அந்த மாவட்டத்தில் ராகனாத்பூர் அருகே ஒரு சிறு கிராமம் இருக்கிறது. அங்கு 900 வீடுகள் இருக்கின்றன. சுமார் 5 ஆயிரம் பேர் குடியிருந்து வருகிறார்கள். இந்நிலையில், …

மேற்கு வங்கத்தில் கரோனா அபாயம் இருக்கும் 10 இடங்களுக்கு சீல்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் கரோனா பாதித்த நோயாளிகள் அதிகம் கண்டறியப்பட்ட 10 இடங்களுக்கு சீல் வைத்திருக்கும் மாநில நிர்வாகம், இங்கு அடுத்த 14 நாட்களுக்கு இந்த உத்தரவு நீடிக்கும் என்று தெரிவித்துள்ளது. இது குறித்து மேற்கு வங்க மாநில முதன்மைச் செயலாளர் ராஜீவா சின்ஹா கூறுகையில், கரோனா பாதித்த நோயாளிகள் அதிகம் கண்டறியப்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து சாலைகள் மற்றும் சந்தைகளும் மூடப்பட்டுவிட்டன. இந்த பகுதிக்குள் யாரும் நுழையவும் முடியாது, இந்த பகுதியில் இருந்து யாரும் …

கர்நாடகத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா: பாதிப்பு 214 ஆக உயர்வு

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கரோனா பரவியுள்ள நிலையில், பலி எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது. இதனால், மக்கள் பேரச்சத்தில் உறைந்துள்ளனர். இந்நிலையில், கர்நாடகத்தில் நேற்று மாலை முதல் இன்று நண்பகல் வரை புதிதாக 7 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுவரை 6 பேர் பலியாகியுள்ளனர். 37 பேர் வரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில், ஐந்து பேர் மைசூருவைச் …