தி.மு.க. சார்பில் இன்று நடைபெற இருந்த அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அனுமதி இல்லை – போலீசார் அறிவிப்பு

தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருப்பதால், தி.மு.க. இன்று ஏற்பாடு செய்து இருந்த அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்க மறுத்து விட்டனர். சென்னை, தமிழகத்தில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி அரசு ஆலோசனை நடத்த வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். ஆனால், கொரோனா மருத்துவம் சார்ந்த விஷயம் என்பதால் அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அவசியம் இல்லை என்று …

ஒரே நாளில் 23 பேர் ‘டிஸ்சார்ஜ்’: தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு

தமிழகத்தில் கொரோனா தொற்று சிகிச்சை முடிந்து நேற்று ஒரே நாளில் 23 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். மேலும் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,204 ஆக உயர்ந்துள்ளது. சென்னை, நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழகத்தில் புதிதாக 31 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,204 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று ஒரே நாளில் 23 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். தமிழக சுகாதாரத்துறை செயலாளர் …

சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஓட்டியவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை – போலீஸ் கமிஷனர் பேட்டி

சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஓட்டியவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார். சென்னை, சென்னை மாநகர போக்குவரத்து போலீசாருக்கு நவீன முக கவசம் நேற்று வழங்கப்பட்டது. இந்த நவீன முக கவசம் முகத்தில் காது, கண் போன்றவற்றையும் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஐ.ஐ.டி. பேராசிரியர் கள் வடிவமைத்துள்ள இந்த முக கவசம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் …

முதியோர் உதவித்தொகை வீடு தேடி வரும்; யாரும் வங்கிக்கு செல்ல வேண்டாம் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவிப்பு

முதியோர் உதவித்தொகை வீடு தேடி வரும் எனவும், யாரும் வங்கிக்கு செல்ல வேண்டாம் என்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார். சென்னை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று சென்னை எழிலகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகம் முழுவதும் முதியோர் உதவித்தொகை வங்கிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா வைரஸ் காரணமாக சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டியதால் முதியோர்கள் வங்கிக்கு வர வேண்டாம். வங்கி ஊழியர்கள் மூலம் வீடுகளுக்கே சென்று …

கொரோனா சமூக தொற்றுக்கான சங்கிலியை உடைத்து எறிந்து விட்டோம் – அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

கொரோனா சமூக தொற்றாக பரவும் நிலைக்கான சங்கிலியை உடைத்து எறிந்துவிட்டோம் என்றும், ஊரடங்குக்கு மக்களின் ஒத்துழைப்பு 100 சதவீதம் கிடைக்கும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை, தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது குறித்து, அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- அமெரிக்கா, இத்தாலி போன்ற வளர்ந்த நாடுகள் உரிய நேரத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்காததால் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், பிரதமர் நரேந்திரமோடியும் சரியான …

10 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று; இந்தியாவில் கொரோனா பாதிப்பு 6 நாளில் இருமடங்கு அதிகரிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 6 நாளில் இருமடங்கு ஆனது. இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துவிட்டது. புதுடெல்லி, சீனாவில் உருவான ஆட்கொல்லி வைரசான கொரோனா தனது கோரப்பார்வையை இந்தியா பக்கமும் திருப்பியது. இதனால் அந்த வைரசிடம் இருந்து மக்களை காக்க தனிமைப்படுத்துதலே அவசியம் என்பதால் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு நேற்றுடன் முடிவுக்கு வந்தநிலையில், தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி ஊரடங்கு அடுத்த …

ஊரடங்கு நீட்டிப்பு 3-ந் தேதி வரை ரெயில் சேவை ரத்து – விமானங்களும் இயங்காது

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த ஊரடங்கு அடுத்த மாதம் 3-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், அதுவரை அனைத்து வகை பயணிகள் ரெயில்கள் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. விமானங்களும் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுடெல்லி, சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அனைத்து நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. அந்த வைரசை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கொரோனா வைரசிடம் இருந்து தப்பிக்க தனித்து இருப்பது மட்டுமே சிறந்த வழி என்பதால் …

ஊரடங்கு நீட்டிப்பு; இந்தியாவுக்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு – ‘சோதனைக்காலத்தில் எடுத்த சரியான முடிவு’

ஊரடங்கு உத்தரவை 3-ந் தேதி வரை நீட்டித்து இருப்பதற்காக இந்தியாவுக்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது. இது சோதனையான காலத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு என்று கூறி இருக்கிறது. புதுடெல்லி, கொரோனா வைரஸ் என்ற எதிரியை வீழ்த்தி விரட்டியடிப்பதில் இந்தியா உறுதியாக இருக்கிறது. அதனால்தான் இதுவரை இல்லாத வகையில் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கினர். அனைத்து தொழில், வணிக நடவடிக்கைகள், போக்குவரத்து, உற்பத்தி என எதுவுமே நடைபெறவில்லை. நேற்று இந்த …

ஊரடங்கு நீட்டிப்பால் கவலைப்பட தேவையில்லை; உணவுப்பொருட்கள் போதுமான அளவு இருப்பு உள்ளது – அமித்ஷா உறுதி

ஊரடங்கு நீட்டிப்பால் கவலைப்படத்தேவையில்லை, உணவுப்பொருட்கள் போதுமான அளவுக்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்று உள்துறை மந்திரி அமித்ஷா உறுதி அளித்தார். புதுடெல்லி, கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கிற வகையில், நாட்டில் பிறப்பிக்கப்பட்டு இருந்த 21 நாள் ஊரடங்கு நேற்று முடிவுக்கு வர இருந்தது. ஆனால் நேற்று நாட்டு மக்களிடம் டெலிவிஷனில் பேசிய பிரதமர் மோடி, மே மாதம் 3-ந்தேதி வரை மேலும் 19 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவித்தார். இதையொட்டி கருத்து தெரிவித்த மத்திய உள்துறை மந்திரி அமித் …

You cannot copy content of this page