பாகிஸ்தானில் கொரோனா வைரசுக்கு 117 பேர் பலி

பாகிஸ்தானில் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 117 பேர் பலியாகி உள்ளனர். இஸ்லாமாபாத்: சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நாடுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளன. பாகிஸ்தானிலும் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமடைந்ததையடுத்து ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் …

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் – ஜோ பிடெனுக்கு, ஒபாமா ஆதரவு

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி டிரம்பை எதிர்த்து போட்டியிடும் ஜோ பிடெனுக்கு, முன்னாள் ஜனாதிபதி ஒபாமா ஆதரவு தெரிவித்துள்ளார். வாஷிங்டன்: அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் 3-ந்தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஜனநாயக கட்சி வேட்பாளரை தேர்வு செய்வதற்கான மாகாணவாரி தேர்தல் நடந்து வருகிறது. இதில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடெனுக்கும், செனட் சபை உறுப்பினர் …

அமெரிக்க பொருளாதார மீட்பு குழுவில் 6 இந்திய வம்சாவளியினா்

அமெரிக்காவில் கரோனா நோய்த்தொற்று அதிதீவிரமாகப் பரவி வரும் சூழலில், அந்நாட்டுப் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான குழுக்களில் கூகுள் தலைமை நிா்வாக அதிகாரி சுந்தா் பிச்சை உள்பட 6 இந்திய வம்சாவளியினா் இடம்பெற்றுள்ளனா். கரோனா நோய்த்தொற்றால் அமெரிக்கா அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. அதன் காரணமாக அந்நாட்டின் பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழல் காரணமாக, 1.6 கோடிக்கும் அதிகமானோா் வேலையிழந்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இந்தச் சூழலில், அமெரிக்காவின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக 200-க்கும் மேற்பட்ட …

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 33 ஆயிரத்தை கடந்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 33 ஆயிரத்தை கடந்துள்ளது. சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவி பெரும் மனித இழப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் …

இந்தியாவுக்கு ரூ.1,178 கோடி ஏவுகணைகள் விற்பனை – அமெரிக்கா ஒப்புதல்

இந்தியாவுக்கு ரூ.1,178 கோடி மதிப்புள்ள ஏவுகணைகள் விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் தெரிவித்துள்ளது. வாஷிங்டன், இந்தியாவுக்கு ‘மாபெரும் பாதுகாப்பு கூட்டாளி’ என்ற அந்தஸ்தை கடந்த 2016-ம் ஆண்டு அமெரிக்கா அளித்தது. இதன்மூலம், அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளிகளுக்கு சமமாக அதிநவீன ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை இந்தியா பெற முடியும். அந்தவகையில், விமானத்தில் இருந்து செலுத்தி, கப்பல்களை தகர்க்கவல்ல ஏவுகணைகளை தங்களுக்கு விற்பனை செய்யுமாறு அமெரிக்காவிடம் இந்தியா கேட்டுக்கொண்டது. இந்தியாவின் வேண்டுகோளை அமெரிக்கா ஏற்றுக்கொண்டுள்ளது. விமானத்தில் இருந்து செலுத்தி கப்பல்களை …

உலக நாடுகள் கொரோனாவுடன் போராடிவரும் நிலையில் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா

வடகொரியா, குறுகிய தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை ஏவி சோதித்ததாக தென்கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது. உலக நாடுகள் கொரோனாவுடன் போராடிவரும் நிலையில் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா வடகொரியா ஏவுகணை சோதனை பியாங்காங்: கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் கதிகலங்கி நிற்கின்றன. நாள்தோறும் உயிரிழப்புகளும், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஆனால் வடகொரியா கொரோனாவின் பிடியில் சிக்காமல் தப்பியுள்ளது. அங்கு இதுவரை ஒருவருக்கு கூட கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என அந்த …

கொரோனா தடுப்பு ஊசி கண்டுபிடிக்க ஒரு வருடம் ஆகலாம் – உலக சுகாதார அமைப்பு தகவல்

வேகமாக பரவி வரும் கொரோனா வைரசுக்கு தடுப்பு ஊசி கண்டுபிடிப்பதற்கு குறைந்தது ஒரு வருடம் ஆகலாம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு ஊசியை கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் கொரோனா தடுப்பு ஊசியை கண்டுபிடிக்க ஒரு வருடம் ஆகலாம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் மார்க்ரெட் ஆரிப் கூறியதாவது:- கொரோனா தடுப்பு ஊசியை கண்டுபிடிக்கும் …

கொரோனா அச்சத்திற்கு மத்தியில் தென் கொரியாவில் பாராளுமன்றத் தேர்தல்

கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைக்கும் நிலையில், தென் கொரியாவில் கடும் பாதுகாப்பு நடைமுறைகளுடன் இன்று பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கொரோனா அச்சத்திற்கு மத்தியில் தென் கொரியாவில் பாராளுமன்றத் தேர்தல் சமூக விலகலை பின்பற்றி வாக்களிக்கும் மக்கள் சியோல்: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி மனிதகுலத்திற்கு பெரும் சவாலாக விளங்கி வருகிறது. 210 நாடுகளில் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1.26 லட்சம் மக்கள் இந்த வைரசுக்கு பலியாகி உள்ளனர். கொரோனா வைரஸ் …

கொரோனா எதிரொலி – பாகிஸ்தானிலும் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 30 வரை நீட்டிப்பு

பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் அங்கு ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமாபாத்: சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நாடுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளன. பாகிஸ்தானில் கொரோனோவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் அங்கு ஊரடங்கு …

அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டவருக்கு எச்-1பி விசா காலம் நீட்டிப்பு

  எச்-1பி விசா தொடர்பான விதிகளை தளர்த்தி, அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டினர் வேலை இழந்தாலும் 8 மாதங்கள் வரை தங்கியிருக்க அமெரிக்கா அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் காரணமாக பல நிறுவனங்கள் பணியாளர்களுக்கு கட்டாய விடுப்பு அளித்து வருகின்றன. அமெரிக்காவில் எச்-1பி விசா வைத்திருப்பவர்கள் வேலை இழக்கும் பட்சத்தில் அடுத்த 60 நாட்களுக்குள் புதிய வேலை தேடிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அவர்களது விசா காலாவதியாகி விடும் என்ற விதிமுறை உள்ளது. தற்போது …