புதுடில்லி: பிரதமர் மோடி, பிரதமர் அலுவலகம் மற்றும் ஜனாதிபதி ராம்நாத் ஆகியோரின் டுவிட்டர் கணக்குகளை அமெரிக்காவின் அதிகாரபூர்வ அலுவலகமான வெள்ளை மாளிகை டுவிட்டரில் பின் தொடர துவங்கியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு உலகெங்கும் தீவிரமடைந்து வருகிறது. அமெரிக்காவில் அதன் தாக்கம் மிகத் தீவிரமாக உள்ளது. அமெரிக்காவிற்கு ஹைட்ரோக்சிகுளோரோக்வின் மருந்தை தராவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடுமென டிரம்ப் கூறியிருந்தார். அதனை தொடர்ந்து மனிதாபிமான முறையில் அமெரிக்காவுக்கு ஹைட்ரோக்சிகுளோரோக்வின் மருந்தை இந்தியா ஏற்றுமதி செய்ததை அடுத்து ‘மோடி கிரேட். ரியலி …
கொரோனா தடுப்பு நடவடிக்கை; மத்திய அரசு ரூ.15 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மத்திய அரசு ரூ.15 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா வைரஸ் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை எட்டியுள்ளநிலையில், பலி எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கொரோனா பாதிப்பு குறித்து கடந்த மாதம் 24-ந்தேதி நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திரமோடி கொரோனா …
நெல்லை, தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா பாதித்த 81 பேருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இம்மூன்று மாவட்டங்களிலும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 81 ஆக உயர்ந்திருக்கிறது. நெல்லை: நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் தற்போது கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்த மூன்று மாவட்டங்களிலும் நேற்று ஒரே நாளில் புதிதாக 22பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதித்திருந்தது உறுதிப்படுத்தப்பட்டது. எனவே இந்த மூன்று மாவட்டங்களிலும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 81 ஆக உயர்ந்திருக்கிறது. …
சவுதி மன்னர் குடும்பத்தை சேர்ந்த 150 பேருக்கு கொரோனா
சவுதி அரேபியா மன்னர் குடும்பத்தினரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த 150 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ரியாத்: சவுதிஅரோபியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது. அங்கு இதுவரை 3,200 பேர் பாதிக்கப்பட்டும் 44 பேர் பலியாகியும் உள்ளனர். இந்த நிலையில் சவுதி அரேபியா மன்னர் குடும்பத்தினரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த 150 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. …
ஆடுகளுக்கு முக கவசம் அணிவித்து மேய்ச்சலுக்கு அழைத்து செல்லும் உரிமையாளர்
அமெரிக்காவில் உள்ள விலங்கியல் பூங்காவில் புலிக்கு கொரோனா பாதிப்பு பற்றி கேள்விப்பட்டதும், தெலுங்கானாவைச் சேர்ந்த ஒருவர் தனது ஆடுகளுக்கு முக கவசம் அணிவித்துள்ளார். ஐதராபாத்: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரையும் இந்த வைரஸ் தாக்கி உள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 6412 ஆக உயர்ந்துள்ளது. 199 பேர் உயிரிழந்துள்ளனர். மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் விலங்குகளையும் கொரோனா வைரஸ் தாக்கி …
தமிழகத்தில் நாளை அமைச்சரவை கூட்டம்- ஊரடங்கு குறித்து முக்கிய ஆலோசனை
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. சமூக பரவலுக்கான அடுத்த நிலையை எட்டுவதை தவிர்ப்பதற்காக ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். மாநில முதல்வர்களும் இதே கருத்தை முன்வைத்துள்ளனர். இது தொடர்பாக பிரதமர் மோடி விரைவில் அறிவிப்பு வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நாளை மாலை 5 மணிக்கு அமைச்சரவை …
கோவை மாவட்டத்தில் 4 லட்சம் பேருக்கு காய்ச்சல் பரிசோதனை
கோவை மாவட்டத்தில் 4 லட்சம் பேருக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 60 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் அவர்களுடன் தொடர்பில் இருந்த 230 பேர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ பரிசோதனை நடைபெறுகிறது. இதையொட்டி கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் இருந்த குடியிருப்புகளில் சுகாதார ஊழியர்கள் சோதனை நடத்தி தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். கோவை, மேட்டுப்பாளையம், அன்னூர், பொள்ளாச்சி, ஆனைமலை ஆகிய பகுதிகளில் சுமார் ஒரு லட்சம் வீடுகளில் சுகாதார பணியாளர்கள் …
4 மாதங்களில் உலகமெங்கும் 15 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் பரவியது
மாதங்களில் கொரோனா வைரஸ், உலகமெங்கும் 15 லட்சம் பேருக்கு பரவி உள்ளது. இதற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை கடந்தது. பாரீஸ்: சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1-ந் தேதி, கொரோனா வைரஸ் முதன்முதலாக உருவானது கண்டு அறியப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்த 4 மாதங்களில் இந்தியா, அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ், இங்கிலாந்து என்று கிட்டத்தட்ட 200 நாடுகளில் இந்த வைரஸ் பரவிவிட்டது. இதன் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த இன்னும் ஒரு வழி கண்டறியப்படவில்லை. …
கொரோனாவில் இருந்து குணமடைந்த 3 லட்சத்து 50 ஆயிரம் பேர்
உலகம் முழுவதும் கொரோனா பரவியவர்களில் 3 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வைரசில் இருந்து குணமடைந்துள்ளனர். ஜெனிவா: சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 209 நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதல் காரணமாக பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையே, இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். மேலும், மருத்துவத்துறையினரின் தீவிர சிகிச்சை மற்றும் தன்னலமற்ற சேவைகளால் …
கொரோனா வைரசால் உலகளவில் பலியானோர் எண்ணிக்கை 90 ஆயிரத்தை தாண்டியது
கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் பலியானோர் எண்ணிக்கை 90 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஜெனீவா: சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 205 நாடுகளுக்கும் மேலாக பரவி பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதற்கிடையே, இன்று காலை நிலவரப்படி உலகம் முழுவதும் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு …