சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் தனியார் ஆஸ்பத்திரியில் பணிபுரியும் 27 வயது பெண் டாக்டருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. சென்னை: சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் தனியார் ஆஸ்பத்திரியில் பணிபுரியும் 27 வயது பெண் டாக்டருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதனால் அவரை வானகரத்தில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இவர் கடந்த 3-ந் தேதி வரை ஆஸ்பத்திரியில் பணிபுரிந்து வந்ததால் அவரை சந்தித்த நபர்கள் யார்-யார்? என்று பட்டியல் எடுத்து அவர்களையும் …
சீன தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கு தடை- அமெரிக்கா எச்சரிக்கை
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் காரணமாக ‘சீனா டெலிகாம்’ நிறுவனத்துக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்படும் என ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான அரசு எச்சரித்துள்ளது. வாஷிங்டன்: சீனாவின் அரசுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான ‘சீனா டெலிகாம்’ அமெரிக்காவிலும் தொலைத்தொடர்பு சேவை அளிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் ‘சீனா டெலிகாம்’, ‘சீனா யூனிகாம்’ ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்களால் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதாக குடியரசு மற்றும் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த 2 எம்.பி.க்கள் குற்றம் சாட்டினார். இதையடுத்து இது …
பூனைகளுக்கும் கொரோனா வைரஸ் தாக்கம் – சீன ஆய்வில் தகவல்
மனிதர்களுக்கு மட்டுமின்றி பூனைகளையும் கொரோனா வைரஸ் தாக்கும் என்று சீன ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. உலகம் முழுவதும் மனித உயிர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரசுக்கு விலங்குகளும் தப்பவில்லை. அமெரிக்காவில் உள்ள உயிரியல் பூங்காவில் நாடியா என்ற பெண் புலிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கடந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த புலிக்கு பராமரிப்பாளர் மூலம் வைரஸ் பரவி தாக்கி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. விலங்குகளுக்கு கொரோனா வைரஸ் பரவுவது தொடர்பான ஆராய்ச்சியில் சீனா இறங்கியது. …
ஊரடங்கு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் – மு.க.ஸ்டாலின் கோரிக்கை
ஊரடங்கு உத்தரவு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என திமுக தலைவ முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:- தற்போது நாடு முழுவதும் நடைமுறையில் உள்ள 21 நாள் ஊரடங்கு 18 நாட்களைக் கடந்துள்ளது. கொரோனா நோய்த்தொற்று இந்திய அளவிலும், தமிழகத்திலும் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் இன்னும் வரவில்லை. பாதிப்புக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் …
புதுச்சேரியில் கொரோனாவுக்கு முதல் பலி
புதுச்சேரியின் மாஹே பகுதியைச் சேர்ந்த 71 வயது முதியவர் கொரோனாவுக்கு இன்று காலை உயிரிழந்துள்ளார். புதுச்சேரி: புதுச்சேரியின் மாஹேவைச் சேர்ந்த 71 வயது முதியவர் காய்ச்சலால் அவதிப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டது. கடந்த ஒரு வாரமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்ததாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, மாஹேவில் இருவர் உள்பட மொத்தம் 8 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மாஹேவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இருவரில் …
பாகிஸ்தானுக்கு கூடுதல் மருத்துவப் பொருட்களை அனுப்பி வைத்த சீனா
பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக சீன அரசு கூடுதல் மருத்துவப் பொருட்களை விமானங்கள் மூலம் அனுப்பி வைத்துள்ளது. இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4700ஐ தாண்டி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 190 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பலியானோரின் எண்ணிக்கை 71 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசை கட்டுப்படுத்த அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு நட்பு நாடான சீனா உதவி வருகிறது. மருந்துகள், முக கவசங்கள், கவச உடைகள் உள்ளிட்ட …
வீடு, வீடாக நடத்தப்பட்ட ஆய்வில் சென்னையில் 1,222 பேருக்கு சளி, காய்ச்சல் அறிகுறி கண்டுபிடிப்பு – 605 பேர் தொடர் கண்காணிப்பு
வீடு, வீடாக நடத்தப்பட்ட ஆய்வில் சென்னையில் 1,222 பேருக்கு சளி, காய்ச்சல் அறிகுறி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் 605 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். சென்னை, கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து, மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் சென்னையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரையும், அவரது வீடுகளை சுற்றி 8 கி.மீ. சுற்றளவில் உள்ள அனைத்து வீடுகளையும் தினந்தோறும் சுகாதாரத்துறை மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும் சென்னை முழுவதும் 90 நாட்களுக்கு வீடு வீடாக …
விண்ணப்பதாரர்களுக்கு வாய்ப்பு: ‘நீட்’ தேர்வு எழுதும் நகரங்களை மாற்றி கொள்ளலாம் – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தேர்வு எழுதும் நகரங்களையும் மாற்றிக்கொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. சென்னை, கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்லூரி, பல்கலைக்கழக தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டு வருகின்றன. அதேபோல், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வான ‘நீட்’ தேர்வு மே மாதம் நடைபெறுவதாக இருந்தது. இந்தநிலையில் அந்த தேர்வையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தேர்வு எழுதும் நகரங்களையும் மாற்றிக்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேசிய தேர்வு முகமையின் டைரக்டர் ஜெனரல் டாக்டர் வினித் …
அமெரிக்க நாட்டில் கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டியது
அமெரிக்காவில் கொரோனா வைரசுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 17 ஆயிரத்தை கடந்தது. நியூயார்க், கொரோனா வைரஸ், உலகின் பிற நாடுகளை விட வல்லரசு நாடான அமெரிக்காவில்தான் ருத்ர தாண்டவமாடி வருகிறது. இதனால் அந்த நாட்டின் 50 மாகாணங்களிலும் பேரழிவு பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. உலகளவில் என்று பார்த்தால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15 லட்சத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது. பலியானவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை நோக்கி செல்கிறது. 22 கோடி மக்கள் தொகையில் 97 சதவீத மக்கள் வீடுகளில் அடைபட்டுக் கிடந்தாலும், …
விஜய் மல்லையாவுக்கு திவால் நடவடிக்கையில் இருந்து நிவாரணம் – லண்டன் கோர்ட் தீர்ப்பு
இந்திய வங்கிகளிடம் இருந்து ரூ.10 ஆயிரம் கோடிக்கு அதிகமாக கடன் வாங்கி விட்டு திருப்பிச்செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பிய விஜய் மல்லையாவுக்கு திவால் நடவடிக்கையில் இருந்து நிவாரணம் வழங்கி லண்டன் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. லண்டன், பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா (வயது 64). கிங் பிஷர் குழும நிறுவனங்களின் தலைவரான இவர், இந்திய ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 12 பொதுத்துறை வங்கிகளில் 1.145 பில்லியன் பவுண்ட் (சுமார் ரூ.10 ஆயிரத்து 830 கோடி) கடன் வாங்கிவிட்டு …