இந்தியாவில் 170 மாவட்டங்கள் கொரோனா ஹாட்ஸ்பாட் பகுதிகள் – சுகாதாரத்துறை

இந்தியாவில் 170 மாவட்டங்கள் ஹாட்ஸ்பாட் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டு உள்ளன என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 170 மாவட்டங்கள் கொரோனா ஹாட்ஸ்பாட் பகுதிகள் – சுகாதாரத்துறை சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் புதுடெல்லி: கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 933 ஆக அதிகரித்துள்ளது என …

உலக நாடுகள் கொரோனாவுடன் போராடிவரும் நிலையில் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா

வடகொரியா, குறுகிய தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை ஏவி சோதித்ததாக தென்கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது. உலக நாடுகள் கொரோனாவுடன் போராடிவரும் நிலையில் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா வடகொரியா ஏவுகணை சோதனை பியாங்காங்: கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் கதிகலங்கி நிற்கின்றன. நாள்தோறும் உயிரிழப்புகளும், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஆனால் வடகொரியா கொரோனாவின் பிடியில் சிக்காமல் தப்பியுள்ளது. அங்கு இதுவரை ஒருவருக்கு கூட கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என அந்த …

கொரோனா தடுப்பு ஊசி கண்டுபிடிக்க ஒரு வருடம் ஆகலாம் – உலக சுகாதார அமைப்பு தகவல்

வேகமாக பரவி வரும் கொரோனா வைரசுக்கு தடுப்பு ஊசி கண்டுபிடிப்பதற்கு குறைந்தது ஒரு வருடம் ஆகலாம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு ஊசியை கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் கொரோனா தடுப்பு ஊசியை கண்டுபிடிக்க ஒரு வருடம் ஆகலாம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் மார்க்ரெட் ஆரிப் கூறியதாவது:- கொரோனா தடுப்பு ஊசியை கண்டுபிடிக்கும் …

கொரோனா அச்சத்திற்கு மத்தியில் தென் கொரியாவில் பாராளுமன்றத் தேர்தல்

கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைக்கும் நிலையில், தென் கொரியாவில் கடும் பாதுகாப்பு நடைமுறைகளுடன் இன்று பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கொரோனா அச்சத்திற்கு மத்தியில் தென் கொரியாவில் பாராளுமன்றத் தேர்தல் சமூக விலகலை பின்பற்றி வாக்களிக்கும் மக்கள் சியோல்: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி மனிதகுலத்திற்கு பெரும் சவாலாக விளங்கி வருகிறது. 210 நாடுகளில் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1.26 லட்சம் மக்கள் இந்த வைரசுக்கு பலியாகி உள்ளனர். கொரோனா வைரஸ் …

கொரோனா எதிரொலி – பாகிஸ்தானிலும் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 30 வரை நீட்டிப்பு

பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் அங்கு ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமாபாத்: சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நாடுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளன. பாகிஸ்தானில் கொரோனோவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் அங்கு ஊரடங்கு …

அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டவருக்கு எச்-1பி விசா காலம் நீட்டிப்பு

  எச்-1பி விசா தொடர்பான விதிகளை தளர்த்தி, அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டினர் வேலை இழந்தாலும் 8 மாதங்கள் வரை தங்கியிருக்க அமெரிக்கா அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் காரணமாக பல நிறுவனங்கள் பணியாளர்களுக்கு கட்டாய விடுப்பு அளித்து வருகின்றன. அமெரிக்காவில் எச்-1பி விசா வைத்திருப்பவர்கள் வேலை இழக்கும் பட்சத்தில் அடுத்த 60 நாட்களுக்குள் புதிய வேலை தேடிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அவர்களது விசா காலாவதியாகி விடும் என்ற விதிமுறை உள்ளது. தற்போது …

பொது போக்குவரத்து தடை தொடர்ந்து நீடிக்கும் – மத்திய அரசு அறிவிப்பு

ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மாநிலங்கள், மாவட்டங்கள் இடையேயான போக்குவரத்துக்கு தடை நீடிக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. புதுடெல்லி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் பல்வேறு வி‌ஷயங்களுக்கு தொடர்ந்து தடை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:- * அனைத்து பகுதிகளிலும் சமூக விலகல் திட்டம் தொடர்ந்து நீடிக்கும். * மத வழிபாட்டு …

எந்தெந்த தொழில்களுக்கு அனுமதி? -மத்திய அரசின் விரிவான வழிகாட்டு நெறிமுறைகள்

ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதம் விதிக்கப்படும், வெளியில் வரும்போது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. எந்தெந்த தொழில்களுக்கு அனுமதி? -மத்திய அரசின் விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் ஊரடங்கால் கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடிய சாலை புதுடெல்லி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் உள்ள முக்கிய அம்சங்கள் …

ஏப்ரல் 20 முதல் விவசாயம், தோட்டத்தொழிலுக்கு அனுமதி அளித்தது மத்திய அரசு

புதுடெல்லி: கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவி வரும் நிலையில் அதை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு அவசியம் எனக் கூறிய பிரதமர் மோடி, மே 3-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், ‘‘வருகிற 20-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவை மிகவும் கடுமையாக பின்பற்ற வேண்டும். கொரோனா வைரஸ் தொற்று இல்லாத பகுதிகளில் ஏப்ரல் 20-க்குப் பிறகு நிபந்தனைகளுடன் சில தளர்வுகள் இருக்க வாய்ப்பு. அதேவேளையில் மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக …

உலக சுகாதார அமைப்பிற்கு நிதி நிறுத்தம்: அறிவித்தார் டிரம்ப்

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பு (WHO ) சீனா சார்பு நிலையில் உள்ளதாக குற்றம்சாட்டியிருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் அந்த அமைப்பிற்கு வழங்கும் நிதியை நிறுத்துவதாக அறிவித்தார். சீனாவிலிருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ், இன்ற உலகையே கதி கலங்க வைத்துள்ளது. அமெரிக்காவில் கொரோனாவுக்கு கொத்து கொத்தாய் மக்கள் பலியாகி வருகின்றனர். கடந்த வாரம் அதிபர் டிரம்ப் பேசுகையில், உலக சுகாதார அமைப்பிற்கு அமெரிக்கா பெருந்தொகையை செலுத்தி வருகிறது. ஆனால் அந்த அமைப்பு …