புதிதாக பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா- கோவிட் என தம்பதியினர் பெயரிட்டு உள்ளனர் ராய்ப்பூர் கொரோனா வைரஸால் ஏற்பட்ட தொற்றுநோய் உலகை ஆட்டுவித்து வருகிறது. அனைத்து நாடுகளும் கொரோனா தொற்றால் ஊரடங்கை அறிவித்து உள்ளன. இந்த நிலையில் சமீபத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு கொரோனா என பெயர் சூட்டி மகிழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் சத்தீஸ்காரில் ஒரு தம்பதியினருக்கு இரட்டை குழந்ததைகள் பிறந்தது. அவர்கள் குழந்தைகளுக்கு‘கொரோனா’மற்றும் ‘கோவிட்’என்று பெயரிட்டு உள்ளனர். இருப்பினும், தம்பதியினர் பின்னர் தங்கள் முடிவை மாற்றி …
கொரோனாவுக்கு எதிரான போர் இப்போதுதான் தொடங்கி இருக்கிறது ‘அனைவரும் ஒன்றுபட்டு போராடுவோம்’ – பிரதமர் மோடி வேண்டுகோள்
முதல்-மந்திரிகளுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, கொரோனாவுக்கு எதிரான போர் இப்போதுதான் தொடங்கி இருப்பதாகவும், இந்த நோய்க் கிருமியை ஒழிக்க அனைவரும் ஒன்றுபட்டு போராடவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். புதுடெல்லி, மனித குலத்தை அச்சுறுத்தி வரும் கண்ணுக்கு தெரியாத எதிரியான கொரோனாவை ஒழிக்க உலக நாடுகள் போராடிக்கொண்டு இருக்கின்றன. கொரோனா வைரஸ் தாக்கியதில் உலகம் முழுவதும் 47 ஆயிரத்துக்கும் அதிகமான பேர் பலியாகி உள்ளனர். 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நோய்க் …
சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் – ஒன்று கூடி விளக்கு ஏற்ற கூடாது; பிரதமர் மோடி
வரும் ஏப்.5ம் தேதி இரவு 9 மணிக்கு வீட்டு மின்மிளக்குகளை 9 நிமிடங்கள் அணைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். புதுடெல்லி, பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்டார். அதில் கூறியதாவது;- ஊரடங்கை மதித்து நடக்கும் நாட்டு மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நாம் எடுக்கும் நடவடிக்கைகளை உலக நாடுகள் பின்பற்றி வருகின்றன. இந்தியாவின் மக்கள் ஊரடங்கு உலகுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறது. கொரோனாவை எதிர்கொள்வதில் உலகிற்கே இந்தியா முன்மாதிரியாக உள்ளது. வீட்டில் …
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 336 பேருக்கு கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 336 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக 56 பேர் உயிரிழந்து இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,301 ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சகம், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 336 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. கொரோனா பாதித்தவர்களில் 157 பேர் சிகிச்சைக்குப் …
கரோனா பாதிப்பு புள்ளிவிவரங்களை மறைக்கிறது சீனா: அமெரிக்கா குற்றச்சாட்டு
வாஷிங்டன்: சீனாவில் கரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டோரின் உண்மையான எண்ணிக்கையை வேண்டுமென்றே குறைத்து தெரிவித்துள்ளதாக அமெரிக்க உளவுத்துறை அறிக்கை அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வூஹானில் கண்டறிந்து பரவத் தொடங்கிய கரோனா நோய்த்தொற்று உலகம் முழுவதும் 200க்கும் அதிகமான நாடுகளில் பரவி பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. கரோனாவின் தோற்றுவாயான சீனாவில் 82,361 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 3,305 …
கொரோனா நிவாரணம்… 1000 ரூபாயுடன் இலவச ரேசன் பொருட்கள் வழங்கும் பணி தொடங்கியது
தமிழகத்தில் கொரோனா நிவாரணமாக 1000 ரூபாயுடன் இலவச ரேசன் பொருட்கள் விநியோகம் இன்று தொடங்கியது. ரேசன் கடைகளில் மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க டோக்கன் வழங்கப்பட்டு பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. கொரோனா நிவாரணம்… 1000 ரூபாயுடன் இலவச ரேசன் பொருட்கள் வழங்கும் பணி தொடங்கியது சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ள நிலையில், அவர்களுக்கு …
வங்கிகளுக்கு 3 மாத தவணை செலுத்தாவிட்டால் கூடுதல் வட்டி கட்ட வாய்ப்பு
வங்கிகளுக்கு வீட்டுக்கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் உள்ளிட்ட கடன்களுக்கான மாத தவணைகள் செலுத்தாவிட்டால் கூடுதல் வட்டி கட்ட வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது. வங்கிகளுக்கு 3 மாத தவணை செலுத்தாவிட்டால் கூடுதல் வட்டி கட்ட வாய்ப்பு கொரோனா வைரஸ் பாதிப்பால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கோடிக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பொருளாதார பாதிப்பில் இருந்து மக்களை காக்கும் நோக்கத்தில் ரிசர்வ் வங்கி பல்வேறு சலுகைகளை அறிவித்தது. வீட்டுக்கடன், வாகனக் …
கொரோனா பாதிப்பு- மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
கொரோனா பாதிப்பு- மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை பிரதமர் மோடி புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே செல்கிறது. சில மாநிலங்களில் கொரோனா பரவல் சற்று அதிகமாக காணப்படுகிறது. எனவே இதுகுறித்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த ஏற்பாடுகளை செய்யும்படி பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டார். அதன்படி, இந்த மாநில முதல்வர்களுடன் இன்று பிரதமர் நரேந்திர மோடி காணொலி …
இந்தியாவில் கொரோனா பெருக வழிவகுத்த 10 இடங்கள் கண்டுபிடிப்பு – மத்திய அரசு தீவிர கவனம்
இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருக மையப்புள்ளிகளாக திகழ்ந்த 10 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அந்த இடங்களில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. புதுடெல்லி, இந்தியாவில், கடந்த ஒரு வார காலத்தில் கொரோனா வைரஸ் பரவல் வேகமாக அதிகரித்தது. இதற்கு மையப்புள்ளிகளாக திகழ்ந்த 10 இடங்களை மத்திய அரசு அடையாளம் கண்டுள்ளது. அந்த இடங்கள் மீது தனிகவனம் செலுத்தி வருகிறது. டெல்லி, கேரளா, உத்தரபிரதேசம், மராட்டியம் ஆகிய மாநிலங்களில் தலா 2 இடங்களும், குஜராத், ராஜஸ்தான் …
