பிரதமர் மோடியை ஆதரிக்கும் காங்., தலைவர்கள்

புதுடில்லி: மத்திய அரசின், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை, காங்., மூத்த தலைவர்கள் பாராட்டி வருவது, கட்சி மேலிடத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, மத்திய அரசு பிறப்பித்துள்ள, 21 நாள் ஊரடங்கு குறித்து, காங்., தலைவர் சோனியா மற்றும் ராகுல் ஆகியோர், விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். மக்கள் ஊரடங்கின் போது, கைகளை தட்டுமாறு, பிரதமர் மோடி விடுத்த வேண்டுகோளை, ராகுல் கடுமையாக விமர்சித்தார். மத்திய அரசை, எப்போதும் விமர்சித்து வரும் முன்னாள் …

ஆய்வகங்களை அதிகரிக்காமல் கரோனா பரவலை கட்டுப்படுத்த இயலாது

தமிழகத்தில் கரோனா பரிசோதனைகளை மேற்கொள்ளும் ஆய்வகங்கள் போதிய எண்ணிக்கையில் இல்லை என்று சுகாதார ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். அதனை அதிகரித்தால் மட்டுமே மாநிலத்தில் கரோனா பாதிப்பு சமூகத் தொற்றாக மாறியுள்ளதா என்பதைக் கண்டறிய முடியும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். தற்போதுள்ள சூழலில் மாநிலத்தில் 17 ஆய்வகங்கள் உள்ளன. அவற்றில் 11 அரசு மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ளன. மற்ற அனைத்தும் தனியார் ஆய்வகங்கள். சுகாதாரத் துறைச் செயலர் அளித்த தகவல்படி, ஓர் ஆய்வகத்தில் நாள்தோறும் நூறு மாதிரிகள் வரை பரிசோதனை செய்ய …

இந்தியாவில் முதல் முறை.. கரோனா பாதித்த பெண்ணுக்கு ஆரோக்கியமான குழந்தை பிறந்தது

புது தில்லி: தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவருக்கும், அவரது கர்ப்பிணி மனைவிக்கும் கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தனி வார்டில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த கர்ப்பிணிக்கு எய்ம்ஸ் மருத்துவமனையிலேயே பிரசவம் நடந்தது. இவர்களுக்கு ஏற்கனவே ஒரு மகள் இருக்கிறார். கரோனா பாதித்த கர்ப்பிணியும் எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவராவார். தாயும், சேயும் நலமாக இருக்கிறார்கள். குழந்தைக்கு எந்த அறிகுறியும் தென்படவில்லை. ஆரோக்கியமாக இருக்கிறது. ஆனால் குழந்தையின் உடல்நிலை …

தமிழகத்தில் கைது எண்ணிக்கை 57 ஆயிரமாக உயர்வு: ஊரடங்கை மீறினால் 2 ஆண்டுகள் சிறை – போலீசார் எச்சரிக்கை

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 57 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இனிமேல் போடப்படும் வழக்குகளில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் வகையில் கடுமையான சட்டம் பாயும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சென்னை, கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பொதுமக்கள் அந்த உத்தரவை மீறி வாகனங்களில் வெளியில் சுற்றுகிறார்கள். கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இனிமேல் வெளியில் சுற்றுபவர்கள் மீது கடுமையான …

தொடர் சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் ஆஸ்பத்திரிகளின் பதிவு ரத்து செய்யப்படும் – தமிழக அரசு எச்சரிக்கை

தாய்-சேய் நலன் மற்றும் நீண்டகால நோய்க்கு தொடர் சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் ஆஸ்பத்திரிகளின் பதிவு ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. சென்னை, இதுகுறித்து தமிழக மருத்துவ மற்றும் ஊரக மருத்துவ சேவை இயக்குனர், மாவட்ட கலெக்டர்கள், மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ உயர் அதிகாரிகளுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:- மாநிலத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள இந்த சூழ்நிலையில் அனைத்து தனியார் ஆஸ்பத்திரிகளும், குழந்தை பிறப்பு, தாய்-சேய் நலன் …

கரோனா தொற்று இதுவரை ஒருவர் கூட பாதிக்கப்படாத நாடுகள் உள்ளன

உலகம் முழுவதும் கொரோனா கோரதாண்டவம் ஆடி வரும் நிலையிலும் கொரோனாவை பற்றி தெரியாத நாடுகள், கண்டு கொள்ளாத நாடுகள் உள்ளன சியோல் கொரோனா வைரஸ் காரணமாக உலகின் பல்வேறு நாடுகள் நடுங்கி வரும் நிலையில், இந்த வைரஸ் காரணமாக ஒருவர் கூட பாதிக்கப்படாத நாடுகளும் உள்ளது என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.உலகையே மிரட்டி வரும் கொடிய நோயாக கொரோனா வைரஸ் இருக்கிறது. இந்த வைரஸ் காரணமாக இதுவரை உலகம் முழுவதும் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 39,566 பேர் …

உலகம் முழுவதும் கொரோனா பலி 53 ஆயிரத்தை தாண்டியது; பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்தது

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்தது. பலியானோர் எண்ணிக்கை 53 ஆயிரத்தை தாண்டியது. வாஷிங்டன், சீனாவில் உருவாகி மற்ற நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைக்கிறது. கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்காததால், அது மக்களுக்கு பரவுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒவ்வொரு நாடும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இந்தியாவிலும் 21 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. என்னதான் நடவடிக்கை …

திவாலாகும் நிலையில் விமான நிறுவனங்கள்: அரசின் ஆதரவு கேட்டு நிர்மலா சீதாராமனுக்கு கடிதம்

திவாலின் விளிம்பு நிலையில் விமான நிறுவனங்கள் இருப்பதாக கூறி, அரசின் உதவியை நாடி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு இந்திய வர்த்தக, தொழில் சம்மேளனம் கடிதம் எழுதி உள்ளது. புதுடெல்லி, கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக, சமூக இடைவெளியை பின்பற்றும் நோக்கத்துடன் நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதே போன்று பல்வேறு வெளிநாடுகளும் தடை விதித்து உள்ளன. இதன் காரணமாக எல்லா விதமான பயணிகள் போக்குவரத்து சாதனங்களும் முடக்கப்பட்டுள்ளன. அனைத்து விமானங்களும் உள்நாட்டு …

ஊரடங்கு கால சிறப்பு நிவாரணம்; 4 கோடி ஏழைப்பெண்களின் வங்கி கணக்குகளில் தலா ரூ.500 – மத்திய அரசு செலுத்தியது

ஊரடங்கு கால சிறப்பு நிவாரணமாக 4 கோடி ஏழைப்பெண்களின் வங்கி கணக்குகளில் மத்திய அரசு ரூ.500 செலுத்தியது. புதுடெல்லி, நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 21 நாள் ஊரடங்கை மத்திய அரசு 25-ந் தேதி முதல் அமல்படுத்தியது. இதன் காரணமாக சாதாரண கூலி தொழிலாளர்கள் தொடங்கி அனைத்து தொழில் துறையினரும், வியாபாரிகளும், தனியார் துறையினரும் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். பலதரப்பினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், கடந்த 26-ந் …

You cannot copy content of this page