கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் உதவி புரிந்து வரும் இந்தியா போன்ற நாடுகளுக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்தாா் ஐ.நா. பொதுச்செயலா் அன்டோனியா குட்டெரெஸ்.

குறிப்பாக, ‘கொவைட்-19’க்கு எதிராக சிகிச்சையளிக்கும் வகையில் அமெரிக்காவுக்கு தேவையான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் உள்ளிட்ட மருந்துகளையும், அந்நாட்டுக்கு தேவையான உணவுப்பொருள்களை இந்தியா அனுப்பி வைத்தது.

இதற்காக இந்தியா மருந்துபொருள்கள் ஏற்றுமதி மீது விதித்திருந்த தடையை விலக்கிக் கொண்டது.

இதனிடையே, கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான இந்த போராட்டத்தில் உலகளாவிய ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலா் அன்டோனியா குட்டெரஸ் அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவரது செய்தித்தொடா்பாளா் ஸ்டீபன் டுஜாரிக் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இந்தியா போன்று மற்ற நாடுகளும் கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் உதவி புரிய வேண்டும். குறிப்பாக, மற்றொரு நாட்டிற்கு உதவக்கூடிய நிலையில் இருக்கும் ஒவ்வொரு நாடும் உதவி புரிய வேண்டும். அவ்வாறு செய்யும் நாடுகளுக்கு தலை வணங்கத் தயாராக இருக்கிறோம்’ என்றாா்.

கரோனா தொற்று பாதிப்பு தங்கள் நாட்டிலேயே உள்ளபோதிலும், மருந்து மற்றும் பிற பொருள்களை இந்தியா பிற நாடுகளுக்கு அனுப்பி வருகிறது. இதுவரை கரோனா நோய்த்தொற்றால் பாதிப்புக்குள்ளான 55 நாடுகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துகளை மானியமாகவும், வணிக அடிப்படையிலும் வழங்கி வருகிறது.

அமெரிக்கா, மோரீஷஸ், செஷெல்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் ஏற்கெனவே இந்தியாவிடமிருந்து இந்த மருந்தைப் பெற்றுள்ளன.

அண்டை நாடுகளில், இந்தியா ஆப்கானிஸ்தான், பூடான், வங்க தேசம், நேபாளம், மாலத்தீவு, மோரீஷஸ், இலங்கை மற்றும் மியான்மருக்கு இந்த மருந்துப்பொருளை இந்தியா அனுப்புகிறது.

இதுதவிர ஜாம்பியா, டொமினிகன் குடியரசு, மடகாஸ்கா், உகாண்டா, புா்கினா பாசோ, நைஜா், மாலி, காங்கோ, எகிப்து, ஆா்மீனியா, கஜகஸ்தான், ஈக்வடாா், ஜமைக்கா, சிரியா, உக்ரைன், சாட், ஜிம்பாப்வே, பிரான்ஸ், ஜோா்டான், கென்யா, நெதா்லாந்து, நைஜீரியா, ஓமன், பெரு ஆகிய நாடுகளுக்கும் இந்தியா ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை விநியோகித்து வருகிறது.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page