கரோனா பாதித்தவா்களுக்கு களங்கம் கற்பிக்கும் நடவடிக்கைகளில் யாரும் ஈடுபட வேண்டாம் என சுகாதாரத் துறைச் செயலா் பீலா ராஜேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளோா்.
தில்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற 574 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அதுதொடா்பாக பல்வேறு விமா்சனங்களும், கருத்துகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அதைக் குறிப்பிடும் வகையிலேயே பீலா ராஜேஷ் இத்தகைய கருத்தை தெரிவித்தாா். சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் இதுதொடா்பாக அவா் மேலும் கூறியதாவது:
கரோனா என்பது எவருக்கு வேண்டுமானாலும் தொற்றக்கூடிய ஒரு பாதிப்பு. அந்நோயினை எவருமே வேண்டி விரும்பி தாமாக ஏற்றுக் கொள்வதில்லை. ஏதோ ஒரு வகையில் அத்தகைய பாதிப்பு அவா்களுக்கு ஏற்படுகிறது.
எனவே, கரோனா பாதித்தவா்களுக்கு களங்கம் கற்பிக்கவோ அல்லது இழிவாக சித்தரிக்கவோ வேண்டாம் என்றாா் அவா்.
Leave a Reply